சிங்கப்பூரில் சுகாதாரப் பராமரிப்புச் சேவை தொடர்ந்து அனைவருக்கும் கிடைக்க முக்கிய மாற்றங்கள் அவசியம் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித் துள்ளார். இந்த இலக்கை எட்ட எடுக்கப்படவேண்டிய முக்கிய மான மூன்று மாற்றங்கள் குறித்து அவர் கடந்த ஆண்டு அறிவிப்பு செய்திருந்தார். சுகாதாரப் பராமரிப்புக்கு அப்பாற்பட்டு மக்களின் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தல், மருத்துவமனை களில் வழங்கப்படும் மருத்துவச் சேவைக்கு அப்பாற்பட்டு சமூக அளவிலான சுகாதாரப் பரா மரிப்புச் சேவையை வழங்குதல், சுகாதாரப் பராமரிப்புச் சேவைக் கான நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்தல் ஆகியவை அந்த மூன்று மாற்றங்கள் ஆகும்.
சுகாதார அமைச்சுக்காக இவ்வாண்டு 10.7 பில்லியன் வெள்ளி பட்ஜெட் ஒதுக்கப் பட்டுள்ளது.