சிங்கப்பூரில் இந்த மார்ச் மாதத்தின் முதல் 16 நாட்களில் பாலியல் சுகத்திற்கான கடன்பற்று மோசடி கள் தொடர்பாக குறைந்தபட் சம் 53 புகார்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன. அத்தகைய ஏமாற்றுப்பேர்வழி களிடம் பலரும் இந்த ஆண்டு ஜனவரி முதல் $304,000 இழந்து விட்டார்கள் என்று போலிஸ் தெரி வித்து இருக்கிறது. இணையம் வழி இப்படி ஏமாற் றிய தில்லுமுல்லு நபர்களுக்கு இலக்கானவர்கள் பெரும்பாலும் ஆடவர்கள். இவர்கள் விசாட், லொகாண்டோ, ஓகேகுப்பிட் போன்ற சமூக ஊடக இணையத் தளங்களின் வழியாக ஏமாந்து இருக்கிறார்கள். இத்தகைய ஆடவர்களைத் தெரிந்துகொள்ளும் மோசடிப் பேர்வழிகள், பிறகு அவர்களுடன் தொலைபேசியில் பேசுவார்கள். அல்லது இணையம் மூலம் செய்தி அனுப்புவார்கள்.
மோசடிப் பேர்வழிகள் இணையம் வழி தொடர்புகொண்டு, பாலியல் சுக ஆசைக்காட்டி பலரையும் ஏமாற்றிய சம்பவங்களின் எண்ணிக்கை மார்ச் முதல் பாதியில் குறைந்தபட்சம் 53 என்று போலிஸ் தெரிவித்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்