தேசிய சிறைச்சாலை, ஒரு தொடக்கப் பள்ளி, ஒரு பன்னாட்டு நிறுவனம், சமூகக் குழு ஆகியவை இவ்வாண்டுக்கான 'வாட்டர் மார்க்' எனும் தண்ணீர் சேமிப்பு விருதுகளைப் பெற்றுள்ளன. விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்ட 35 விண்ணப்பங்களில் சிங்கப்பூர் சிறைச்சாலைத் துறை, தெம்பனிஸ் தொடக்கப் பள்ளி, 'பிராட் அண்ட் விட்னி' நிறுவனம், நீ சூன் சவுத் தூய்மை, பசுமைக் குழு ஆகியவற் றின் விண்ணப்பங்களை விருதுக் காகப் பொதுப் பயனீட்டுக் கழகம் தேர்வு செய்தது. தண்ணீர் சேமிப்புச் செயல் களில் சிறந்து விளங்கும் அமைப்பு களுக்கு ஆண்டுதோறும் 'வாட்டர் மார்க்' விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சிங்கப்பூர் சிறைச்சாலை வளாகத்தில் உள்ள உணவ கம் ஒன்றில் தண்ணீர் சேமிப்பு கருவி பொருத்தப்பட்டு உள்ள குழாயைப் பயன்படுத்தும் கைதி ஒருவரின் செயலைப் பார் வையிடுகிறார் சிறை அதிகாரி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்