ஒருவர் மற்றொருவரின் கலாசார வழி முறைகளைப் பற்றி கற்றுக் கொள் வது முக்கியமான ஒரு தொடர் நடவடிக்கை என்றும் நேற்று நடத்தப்பட்ட முதல் 'ஷரியா' இஸ்லாமிய சட்டக் கருத்தரங்கு வெளிப்படை யான கருத்துப் பகிர்வை ஊக்கு விப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் கூறினார் நாடாளுமன்ற நாயகர் ஹலிமா யாக்கோப். சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக வளா கத்தில் கிட்டத்தட்ட 170 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட ஷரியா சட்டக் கருத்த ரங்கில் பேசிய திருவாட்டி ஹலிமா, மலாய்க்காரர்கள், முஸ்லிம் கள் ஆகியோரின் உரிமை களைக் கவனித்துக்கொள்ளும் அதே வேளையில் அனைத்து சிறுபான்மையினரின் உரிமைகளும் கட்டிக்காக்கப்படுவதை உறுதி செய்ய நமது நாடு சில செயல் முறைகளை உருவாக்கியதன் மூலம் வித்தியாசமான ஓர் அணுகு முறையைக் கையாள்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம்களுக்கான ஷரியா சட்டம் குறித்த கையேடு ஒன்றை திருவாட்டி ஹலிமா யாக்கோப்பிற்கு வழங்கும் தேசியப் பல்கலைக்கழக சட்டத் துறை மாணவர்கள் திரு பிரபு தேவராஜ் (வலது), குமாரி ஷீஃபா சஃபி ஷிர்பீனி. படம்: பெரித்தா ஹரியான்