இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத் தலைநகரான அமராவதி யின் வர்த்தக மையத்தை உரு வாக்கும் பணி அசெண்டாஸ்= சிங் பிரிட்ஜ் மற்றும் செம்கார்ப் டெவலப்மண்ட் என்னும் சிங்கப் பூர் குழுமத்துக்கு வழங்கப்பட்டுள் ளது. இதன் 6.84 சதுர மீட்டர் கொண்ட ஆரம்ப கட்ட வேலை களை தொடங்குவதற்கான ஒப் பந்தத்தை வழங்கும் நிகழ்ச்சியில் நேற்று சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சர் மற்றும் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கலந்துகொண் டனர். ஆந்திராவிலுள்ள கிருஷ்ணா நதியின் தென்கரையோரத்தில் தொடங்கும் இந்த ஆரம்ப கட்ட பணிகளில் அலுவலகக் கட்ட டங்கள், குடியிருப்புக் கட்டடங் களைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆந்திராவில் உருவாக்கப்பட்டு வரும் புதிய தலைநகரான அமராவதியின் மாதிரி வடிவத்தைப் பார்வையிடும் சிங்கப்பூர் வர்த்தக, தொழில் (தொழில்) அமைச்சர் எஸ்.ஈஸ்வரனும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும். அருகில் சிங்கப்பூர், ஆந்திர அதிகாரிகள். படம்: ஐஇ சிங்கப்பூர்