$42,034 மதிப்புள்ள பொருட்களைத் திருடிய பணிப்பெண்ணுக்குச் சிறை

பிரபல சிகை அலங்கார நிபுணரான 46 வயது திரு அடி லீயிடம் இருந்து $42,034 மதிப்புள்ள பொருட்களைத் திருடிய குற்றத்திற்காக இந்தோனீசியப் பணிப்பெண் 40 வயது நமியா நூருலியாவுக்கு நேற்று ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மோன்சூன் குரூப் ஹோல்டிங்சின் நிறுவனரும் தலைவருமான திரு அடி லீயின் செந்தோசா கோவ் இல்லத்திலிருந்து இந்த ஆண்டு பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் நமியா நான்கு முறை பொருட்களைத் திருடியுள்ளார். நான்கு திருட்டுக் குற்றங்களில் மூன்றை நமியா ஒப்புக்கொண்டார்.

திரு அடி லீயும் அவரது பிரத்திதேய உரிமையாளரும் வெளிநாடு சென்றிருந்த நேரங்களில் விலையுயர்ந்த பயணப் பைகள், காலணிகள், கைப்பைகள், கைத்தொலைபேசி போன்றவற்றைத் திருடி, அவற்றை இந்தோனீசியாவுக்கு நமியா அனுப்பியுள்ளார். திருட்டுச் சம்பவம் பற்றித் தெரியவந்ததும் நமியா தமது மகளிடம் அந்தப் பொருட்களைத் திருப்பி அனுப்புமாறு கூறியுள்ளார். ஆனால் சிலபொருட்கள் விற்கப் பட்டுவிட்டதால் $28,350 மதிப்புள்ள பொருட்கள் மட்டுமே மீட்கப்பட்டன. ஒவ்வொரு குற்றத்திற்கும் அதிகபட்சமாக ஏழாண்டு சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!