சிங்கப்பூரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் புத்தாண்டுடன் நான்கு குழந்தைகளும் பிறந்துள் ளன. புத்தாண்டு தொடங்கிய அதே நேரத்தில் மவுண்ட் அல்வேனியா மருத்துவமனையில் அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. அப்பி ஹோ என்று அந்தக் குழந்தைக்குப் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
புத்தாண்டு பிறந்தபோது தாம்சன் மருத்துவ நிலையத்தில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. கேகே மாதர், சிறார் மருத்துவ மனையில் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இதனிடையே அப்பி ஹோ குழந்தையின் பெற்றோர்கள் தாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தனர்.