இவ்வாண்டின் முதல் காலாண்டில் கடந்த ஏழாண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆட்குறைப்பு விகிதம் குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாது, சிங்கப் பூரர்கள் மற்றும் நிரந்தரவாசி களுக்கான வேலையின்மை விகிதம் கடந்த இரண்டு ஆண்டு களில் இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளது. இவ்வாண்டின் முதல் காலாண்டில் ஆட்குறைப்பு எண் ணிக்கை 2,100ஆக இருந்ததாக மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் ஆட்குறைப்பு எண் ணிக்கை 3,680ஆக இருந்தது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 4,000 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.
2011ஆம் ஆண்டின் மூன் றாவது காலாண்டில் பதிவான ஆட்குறைப்பு எண்ணிக்கைக்குப் பிறகு இவ்வாண்டின் முதல் காலாண்டில் பதிவான ஆட் குறைப்பு எண்ணிக்கை ஆகக் குறைவானது. 2011ஆம் ஆண்டின் மூன் றாவது காலாண்டில் 1,960 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர். இவ்வாண்டின் முதல் காலாண்டில் உற்பத்தித்துறை, கட்டுமானத்துறை, சேவைத்துறை ஆகியவற்றில் ஆட்குறைப்பு விகிதம் குறைந்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்தது. ஒட்டுமொத்த வேலையின்மை விகிதமும் இவ்வாண்டின் முதல் காலாண்டில் 2 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் வேலையின்மை விகிதம் 2.1 விழுக்காடாக இருந்தது. சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தர வாசிகளுக்குமான ஆக அண்மைய வேலையின்மை விகிதம் 2.8 விழுக்காடாகப் பதிவாகி உள்ளது.