கடந்த நூற்றாண்டில் நடந்த போர்களில் பங்கெடுத்துக்கொண்ட அமெரிக்க படைவீரர்கள் 82,000 பேரை இன்னமும் காணவில்லை. அவர்களில் 7,702 பேர் கொரிய போரில் காணாமல் போனவர்கள். இரண்டு கொரியாக்களுக்கும் இடையே நடந்த போரில் கொல்லப் பட்ட தங்களுடைய அன்புக்குரியவர் களை நல்லடக்கம் செய்யும் வாய்ப்பு இதுவரையில் பல அமெரிக்கர் களுக்கு கிடைக்கவே இல்லை. ஆனால் இப்போது சிங்கப்பூரில் நடந்து முடிந்த உச்சநிலை சந்திப்பு மூலம் அவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.
கொரிய போர் 1953ல் முடி வடைந்தது. அப்போது பிடிபட்ட அல்லது காணாமல்போய்விட்டதாக தெரிவிக்கப்பட்ட படைவீரர்களின் எச்சங்களை மீட்டுக்கொள்ளவும் அவற்றை அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பவும் தங்கள் நாடுகள் உறுதி பூண்டிருப்பதாக அமெரிக்கா - வட கொரியா இரு நாட்டுத் தலைவர்களும் கையெழுத் திட்ட கூட்டு அறிக்கை தெரி வித்துள்ளது. கொரியப் போரில் 120,000 கொரியப் படைகளும் போலிஸ் அதிகாரிகளும் என்ன ஆனார்கள் என்பது இதுவரையில் தெரியவில்லை.