சிங்கப்பூரில் உள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்களில் பத்தில் எட்டு வரும் பட்ஜெட் அறிக்கையில் தங்களுக்கு இன்னும் அதிகமான வர்த்தகச் சலுகைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றன என்று டிபிஎஸ் வங்கி நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
சிரமமான வர்த்தகச் சூழலில் சிறிய நடுத்தர நிறுவனங் களை மனிதவள விவகாரங்கள் 26.5%, உயர்வான நடை முறைச் செலவுகள் 21.5%, வளரும் வர்த்தக வருமானத்தின் சவால்கள் 21% என்ற அளவில் பாதிக்கும். மனிதவள சவால் களைப் பார்த்தால் சரியான ஊழியர்களை வேலைக்கு அமர்த்துதலில் 43%, ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள் ளுதலில் 27% என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் அம்சத்தை எடுத்துக்கொண்டால், ஐந்து சிறிய நடுத்தர நிறுவனங்களில் நான்கு, தங்கள் ஊழியர்கள் இப்போது வேலைக்கு ஏற்ற திறனைப் பெற்றிருக் கிறார்கள் என்றன.
அரசாங்கத்தின் 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' முயற்சிகளின் வழி பத்தில் ஒன்பது சிறிய நடுத்தர நிறுவனங்கள் இப்போது கட்டுப்படியான பயிற்சித் திட்டங்களில் தாங்கள் பங்கேற்க முடிகிறது என்று சொன்னதாக ஆய்வு கூறியது.
10ல் 8 சிறிய, நடுத்தர நிறுவனங்கள் வர்த்தகச் சலுகைகள் எதிர்பார்க்கின்றன
16 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Feb 2019 10:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!