புதிய ஈரறை ‘ஃபிளெக்சி’ வீடுகளுக்கு பதியும் ஒற்றையர் எண்ணிக்கை அதிகரிப்பு

சிங்கப்பூரில் கூடுதலான ஒற்றையர் களால் புதிய ஈரறை 'ஃபிளெக்சி' வீடுகளை முதல்முறையாக வாங்க முடிவதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) தெரிவித்துள்ளது.
ஒற்றையர்களுக்காக கூடுதல் வீடமைப்புத் தெரிவுகளை வழங்க அரசாங்கம் எடுத்துவரும் முயற்சி களின் ஒரு பகுதியாக, முதிர்ச்சி அடையாத பேட்டைகளில் புதிய ஈரறை ஃபிளெக்சி வீடுகளை 35 வயதுக்கு மேற்பட்டவர்களால் வாங்க முடிகிறது.
2013ஆம் ஆண்டு ஜூலையில் இடம்பெற்ற தேவைக்கேற்பக் கட்டி விற்கப்படும் (பிடிஓ) வீட்டுத் திட்டத்தைத் தொடர்ந்து ஏறக் குறைய 14,500 ஒற்றையர்கள் புதிய ஈரறை ஃபிளெக்சி வீடு களுக்குப் பதிவு செய்துள்ளனர்.
அவர்களில் 6,200 பேர் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் வீட்டுச் சாவிகளைப் பெற்றுக் கொண்டனர்.
தகுதிபெறும் ஒற்றையர்கள் வீவக வீடுகளை முதன்முறையாக வாங்கும்போது $40,000 வரை மானியம் பெறலாம். அதில், கூடுதல் மத்திய சேம நிதி வீடமைப்பு மானியமாக $20,000 வரையும் சிறப்பு மத்திய சேம நிதி வீடமைப்பு மானியமாக $20,000 வரையும் பெறலாம்.
2013ஆம் ஆண்டு ஜூலை யிலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் வரை ஏறக்குறைய 9,200 ஒற்றை யர்கள் இந்த மானியத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!