வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் பழைய வீடமைப்புப் பேட்டைகளின் இரண்டாம் கட்ட வீட்டு மேம்பாட் டுத் திட்டத்தை 2020ல் தொடங்க வுள்ளது.
இந்த வீட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் (எச்ஐபி) கீழ், 1987க்கும் 1997க்கும் இடையில் கட்டப்பட்ட 230,000 வீடுகள் வருகின்றன என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்ற நாடாளுமன்றத்தில் கூறினார்.
எனினும், எல்லா புளோக்கு களுக்கும் மேம்பாட்டுப் பணிகள் எப்போது செய்து முடிக்கப்படும் என்று கூறமுடியாது. நிதி நிலை மையைப் பொறுத்து மேம்பாடுகள் இடம்பெறும் என்ற அமைச்சர், தங்கள் வட்டாரத்தின் அடுக்கு மாடிகளை முன்மொழிய இந்த ஆண்டு இறுதியில் நகர மன்றங் கள் அழைக்கப்படும் எனக் கூறி னார்.
இந்த மேம்பாட்டின் கீழ் கழி வுக் குழாய்களை மாற்றுவது, கான்கீரிட் மாற்றம் போன்றவற் றுடன் கழிவறையைச் சீரமைப் பது போன்ற விருப்பத் தேர்வு மேம்பாடுகளும் இடம்பெறும்.
இந்த மேம்பாட்டுக்கு மொத் தம் $4 பில்லியனுக்கு அதிகமாக செலவாகும் என கணிக்கப் பட்டுள்ளது.
எனினும், 60 முதல் 70 ஆண்டு காலம் பழமையான வீடுகளுக்கான 2வது வீட்டு மேம்பாட்டுத் திட்டம் (எச்ஐபிII) 'வெர்ஸ்' திட்டம் போன்றவை குறித்த விவரங்களை அமைச்சர் தெரிவிக்கவில்லை.
தனியார் பேட்டை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட வுள்ள தனியார் குடியிருப்புப் பேட்டைகள் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் தேர்வு செய்யப்படும் என்றும் அமைச்சர் மன்றத்தில் விவரித்தார்.