வீவக வாடகை வீடுகளில் வசிப் பவர்கள் உடல்நலக் குறைவால் அதிகளவில் துன்புறுவதாக கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட இரு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாடகை வீடுகளில் வசிக்காதவர் களைவிட இவர்கள் அதிகம் உடல்நலிவால் பாதிக்கப்படுவ தாக அந்த ஆய்வுகள் காட்டு கின்றன.
வாடகை வீடுகளில் வசிப்பது ஒருவர், ஓராண்டில் மூன்று அல் லது அதற்கும் அதிக தடவைகள் மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெறும் அபாயம் அதிகரிக்கிறது.
இதனால், இறப்பு எண்ணிக் கையும் அதிகரிப்பதாக சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் குடும்ப மருத்துவம், தொடர் பரா மரிப்பு பிரிவைச் சேர்ந்த டாக்டர் லோ லியன் லெங் தலைமையில் செய்யப்பட் இரு ஆய்வுகளும் காட்டுகின்றன.
முதலாவது ஆய்வில் சிங்கப் பூர் பொது மருத்துவமனையின் 2014ல் தரவுத் தொகுப்பின் தெலுங் பிளாங்கா, சைனா டவுன், புக்கிட் மேரா ஆகிய இடங்களில் வசிப்போரை உள் ளடக்கிய 16,306 நோயாகளின் தரவுகளைக் கொண்டு செய்யப் பட்டது.
இதில் 10% அடிக்கடி மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெறுவர்களாக வகைப் படுத்தப்பட்டனர். இதில் ஐந்தில் ஒரு பங்கினர் வாடகைவீடுகளில் வசிப்பவர்கள். அவர்களின் சராசரி வயது 66.5.
இரண்டாவது ஆய்வு 2012 முதல் 2017 வரையிலான கால கட்டத்தில் 147,004 நோயாளிகளி டையே மேற்கொள்ளப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் வாடகை வீடுகளில் வசிக்காதவர்களை விட, வாடகை வீடுகளில் வசிப்ப வர்கள் மரணமடைந்தது 1.57 மடங்கு அதிகமாக இருந்தது. இந்த ஆய்வில் நோயாளியின் சராசரி வயது 50.1 ஆகவும், ஏழு விழுக்காட்டில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களாகவும் இருந்தனர்.