அரக்கான் சிங்கப்பூர் சங்கத்தின் தலைவர்க ளைக் கைது செய்து அவர்களை சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பிய சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு எதிராக மியன்மார் குடிமக்கள் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்துக்கு வெளியே கடந்த திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மியன்மார் அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதமேந்தி வன்முறையில் ஈடுபட, சிங்கப்பூரில் வசிக்கும் மியன்மார் நாட்டவர்களிடமிருந்து அச்சங்கம் ஆதரவு திரட்டியதால், அச்சங்கத்தின் ஆறு மியன்மார் நாட்டினர் கடந்த வாரம் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டு, பின்னர் தங்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
வாஷிங்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் பற்றி தனக்குத் தெரியும் என்று கூறிய சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு, அரக்கான் அமெரிக்க சமூகத்தினர் சிங்கப்பூரில் தங்கள் அமைப்பின் தலைவர்கள் கைது செய்ததைக் கண்டிக்கும் கடிதத்தை சிங்கப்பூர் தூதரகம் பெற்றுக்கொண்டது என்றும் கூறியது. வாஷிங்டன் ஆர்ப்பாட்டத்தில் கிட்டத்தட்ட 20க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர் என்றும் 'வாய்ஸ் ஆஃப் அரக்கான்' டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.