ஓய்வுகால நிதி: 28வது இடத்தில் சிங்கப்பூர்

இவ்வாண்டு வலுவான ஓய்வுகால நிதி ஆதாரங்களைப் பெற்றுள்ள ஆசிய நாடுகளின் வரிசையில் சிங்கப்பூர் முதல் மூன்று இடங்களில் இடம்பிடித்து முன்னிலை பெற்றுள்ளது. ஆனால் ஓய்வூதியம் பெறுவோரின் வாழ்க்கைத் தரத்தில் சிங்கப்பூர் பின்தங்கியுள்ளது.

ஓய்வுகால பாதுகாப்பு குறியீட்டு ஆண்டு அறிக்கையில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.

ஒட்டுமொத்தமாக 44 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சிங்கப்பூர் தொடர்ந்து 28வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஆனால் ஓய்வுகால பாதுகாப்பை வழங்கும் ஆசிய நாடுகளின் வரிசையில் ஜப்பான், தென் கொரியாவுக்கு அடுத்ததாக சிங்கப்பூர் மூன்றாவது நிலையில் உள்ளது.

ஒட்டு மொத்த நாடுகளின் வரிசையில் ஜப்பான் 23வது இடத்திலும் தென்கொரியா 24வது இடத்திலும் உள்ளன.

ஒரு நாட்டின் நிதி நிலை, சேமிப்பு, முதலீடு, வாங்கும் சக்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஓய்வுகால நிதி மதிப்பிடப்படுகிறது. மகிழ்ச்சி, காற்றின் தரம், தண்ணீர், இயற்கை சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிப்பதில் கணக்கிடப்படுகின்றன. ஆனால் வாழ்க்கைத் தரத்தில் எந்தவொரு ஆசிய நாடும் முதல் 25 இடங்களில் இடம்பெறவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!