புக்கிட் தீமா விரைவுச்சாலையில் நிகழ்ந்த மூன்று வாகன விபத்தை அடுத்து 20 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அப்போது அந்த விரைவுச்சாலையில் சென்றுகொண்டிருந்த சியாஹிர், சம்பவ இடத்தைக் காணொளி எடுத்து ஸ்டாம்ப் செய்தித்தளத்திற்கு அனுப்பினார்.
தனியார் பேருந்தின் பின்பக்கமாக மோட்டார் சைக்கிள் இடித்ததை அந்தக் காணொளி காட்டுகிறது. விபத்துக்குள்ளான தனியார் பேருந்தைச் சுற்றிலும் வாகனச் சிதைவுகள் சிதறிக் கிடந்தன.
அக்டோபர் 13ஆம் தேதி லாரி, தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து போலிசாருக்குப் பிற்பகல் 1.38 மணிக்குத் தகவல் கிடைத்தது. எட்டு வயதுக்கும் 68 வயதுக்கும் இடைப்பட்ட 20 பேர் சுயநினைவுடன் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை, இங் டெங் ஃபோங் மருத்துவமனை, டான் டோக் சேங் மருத்துவமனை ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டனர்.
போலிசாரின் விசாரணை தொடர்கிறது.