ஹவ்காங் கூட்டுரிமை வீட்டில் தீ; 180 பேர் வெளியேற்றம்

ஹவ்காங்கில் உள்ள ஒரு கூட்டுரிமை வீட்டில் நேற்று அதிகாலை தீ மூண்டது.

புளோக் 5 புவாங்கோக் கிரீன் பகுதிக்கு காலை 5.50 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வீரர்கள் வந்தபோது சுமார் 180 குடியிருப்பாளர்கள் அந்த இடத்தைவிட்டு சுயமாக வெளியேறிவிட்டனர்.

தீக்காயங்கள், சுவாசப் பிரச்சினை உள்ளிட்டவை தொடர்பில் இருவரை மருத்துவ உதவியாளர்கள் பரிசோதித்தனர். எனினும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட அவ்விருவரும் மறுத்துவிட்டனர்.

அந்த வீட்டின் படுக்கை அறையில் மின்சைக்கிள் ஒன்றின் மின்கலம் மின்னூட்டம் செய்யப்பட்டபோது தீ மூண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

தனிநபர் நடமாட்ட சாதனங்கள் அல்லது மின்சைக்கிள்களை மின்னூட்டம் செய்வதால் ஏற்படும் தீச்சம்பவங்களை எப்படி தவிர்ப்பது என்பது குறித்த விவரங்களைக் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!