ராஜநாகம் காண்பதே அரிது. அதனிதும் அரிது அதிக மக்கள் கூட்டம் உள்ள பொது இடத்தில் இதைக் காண்பது.
ஞாயிற்றுக்கிழமை மார்சிலிங் எம்ஆர்டி நிலையத்திற்கு இந்தப் பாம்பு சென்று சலசலப்பை ஏற்படுத்தியது. இறுதியில் ஏக்கர்ஸ் விலங்கு நல அமைப்பினர் இதனை பாதுகாப்புடன் எடுத்துச் சென்றனர்.
ராஜநாகம் குறித்த தகவல் ஏக்கர்ஸ் அமைப்புக்குக் கிடைத்ததாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி திரு கலைவாணன் உறுதி செய்தார்.
"வழக்கமாக பாம்புகள் காடுகளில் காணப்படுவதால் பாம்பு இங்கு காணப்பட்டது மிகவும் விந்தையானது," என அவர் கூறினார்.