குறைந்தது ஒரு சிங்கப்பூரர் உள்ள குடும்பங்களுக்கு பயனீட்டுக் கட்டணங்களில் $100 கழிவு

கொவிட்-19 கிருமித் தொற்றை முறியடிப்பதற்கான போராட்டத்தில், வீட்டிலேயே இருந்து தங்களின் பங்கை ஆற்றும் சிங்கப்பூரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அரசாங்கம் பயனீட்டுக் கட்டணங்களில் கழிவு வழங்கவுள்ளது.

குறைந்தது ஒரு சிங்கப்பூரர் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பயனீட்டுக் கட்டணத்தில் $100 கழிவு ஒரு முறை வழங்கப்படும்.

ஒற்றுமைக்கான பயனீட்டுத் தொகை என இந்தத் திட்டத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

ஜூலை அல்லது ஆகஸ்ட் மாத பயனீட்டுக் கட்டணத்தில் அந்தச் சலுகை வழங்கப்படும்.

கொவிட்-19 ஆதரவுத் திட்டத்தின் கீழ் குடும்பங்களுக்கு உதவியளிக்க மேலும் $800 மில்லியன் ஒதுக்கப்படும்.

கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாகத் தங்களின் வேலைகளை இழந்தவர்கள், சம்பளம் இல்லாத விடுப்பில் உள்ளவர்கள், எதிர்வரும் மாதங்களில் சம்பளக் குறைவை எதிர்நோக்கக் கூடியவர்கள் அதன் மூலம் பலனடைவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!