இவ்வாண்டு தேசிய தினத்தன்று குடியிருப்புப் பேட்டைகளில் படைப் பிரிவு வாகனங்களின் ஊர்வலம் நடைபெறும்.
சிங்கப்பூர் ஆயுதப் படைகள், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சிங்கப்பூர் போலிஸ் படை ஆகியவற்றுக்குச் சொந்தமான 66 வாகனங்கள் ஊர்வலத்தில் பங்கேற்கும்.
22 வகை வாகனங்கள் ஐந்து பாதைகள் வழியாக குடியிருப்புப் பேட்டைகளுக்குச் செல்ல இருக்கின்றன.
சிங்கப்பூரில் வடக்கு, தெற்கு, மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு ஆகிய ஐந்து பாதைகளில் இந்த படைப் பிரிவு வாகனங்களின் ஊர்வலம் நடைபெறும்.
ஒவ்வொரு பாதையிலும் 13லிருந்து 14 வாகனங்கள் செல்லும். ஒவ்வோர் ஊர்வலப் பாதையிலும் வாகனங்களை இயக்கும் அதிகாரிகள் உட்பட 60லிருந்து 70 பேர் பங்கேற்பர்.
கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போரில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் முன்களப் பணியாளர்களும் அத்தியாவசிய சேவை ஊழியர்களும் இந்த வாகனங்களில் பயணம் செய்வர்.
இவ்வாண்டின் ஊர்வலம் 200 கிலோ மீட்டருக்கு நடைபெறும்.
இதற்கு முன் குடியிருப்புப் பேட்டைகளில் இவ்வளவு நீண்ட படைப் பிரிவு வாகன ஊர்வலம் நடத்தப்பட்டதில்லை.
கடந்த ஆண்டு 133 கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டுமே ஊர்வலம் நடத்தப்பட்டது. அப்போது 79 வகை வாகனங்கள் பங்கேற்றன.