சிங்கப்பூர்-அமெரிக்க தற்காப்பு கலந்துரையாடல்

சிங்கப்பூர்-அமெரிக்க தற்காப்பு கலந்துரையாடல்

1 mins read
6040fb36-bf44-4f03-b8e8-65d7d24cd50c
அமெ­ரிக்­க தற்­காப்­புக் கொள்­கைப் பிரி­வின் தற்­கா­லிக அதி­காரி ஜேம்ஸ் ஆண்­டர்­சன், சிங்­கப்­பூ­ரின் தற்­காப்­பு அமைச்சர் இங் எங் ஹென் படம்: GOV.SG -

அமெ­ரி­க்கா, சிங்­கப்­பூர் தற்­காப்பு அதி­கா­ரி­கள் நேற்று இங்கு சந்­தித்­துப் பேசி­னர். இரு நாடு­க­ளுக்­கும் இடை­யி­லான தற்­காப்பு உற­வு­களை வலுப்­ப­டுத்­தும் நோக்­கில் வழக்­க­மாக நடத்­தப்­படும் உயர்­மட்ட பாது­காப்­புக் கலந்­து­ரை­யா­ட­லுக்­காக அவர்­க­ளின் சந்­திப்பு நிகழ்ந்­தது.

தற்­காப்பு அமைச்­சில் நடத்­தப்­பட்ட சிங்­கப்­பூர்-அமெ­ரிக்க உத்­தி­பூர்வ பாது­காப்­புக் கொள்­கைக் கலந்­து­ரை­யா­ட­லுக்கு அமெ­ரிக்­க தற்­காப்­புக் கொள்­கைப் பிரி­வின் தற்­கா­லிக அதி­காரி ஜேம்ஸ் ஆண்­டர்­சன், சிங்­கப்­பூ­ரின் தற்­காப்­புத் துறை நிரந்­த­ரச் செய­லா­ளர் சான் ஹெங் கீ ஆகி­யோர் தலைமை வகித்­த­னர்.

நீண்­ட­கால, உன்­ன­த­ இரு­த­ரப்பு தற்­காப்பு உற­வு­களை இரு­வ­ரும் மறு­உ­று­திப்­ப­டுத்­தி­னர்.

1990ஆம் ஆண்­டு ஏற்படுத்தப் பட்ட புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்­திற்கு இணங்க இரு­த­ரப்பு தற்­காப்பு ஒத்­து­ழைப்பை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான வாய்ப்­பு­கள் குறித்­தும் அவ்­வி­ரு­வ­ரும் கலந்­தா­லோ­சித்­த­னர்.