சிங்கப்பூர் மாணவர்கள் கிருமித்தொற்றைக் காட்டிலும் பள்ளித் தேர்வுகள் பற்றியே அதிக கவலை கொள்வதாக ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
ஆய்வில் பங்கெடுத்த 10 பிள்ளைகளில் எழுவர் பள்ளித் தேர்வுகள் குறித்து, கோபம், கவலை, வருத்தப்படுவது என தங்கள் உணர்வுகளை வெளியிட்டுள்ளனர்.
மேலும், இதில் ஐந்தில் மூவருக்கு மேல் கவலையடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்புநோக்க, 10ல் அறுவர் கொரோனா கிருமித்தொற்று குறித்து அமைதி, பாதுகாப்பாக இருப்பது, நம்பிக்கை போன்ற உணர்வுகளைக் கொண்டிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வில் 1,050 பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நிலையில் ஆய்வின் முடிவுகள் நேற்று வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆய்வின் முடிவுகள் பள்ளித் தேர்வுகள், அதில் மாணவர்கள் பெறக்கூடிய தேர்ச்சி ஆகியவற்றுக்கே சிங்கப்பூர் மாணவர்கள் அதிக அளவிலான முக்கியத்துவம் வழங்குவதாக எடுத்துக் காட்டுகின்றன.
“ேதர்வுகள் ஓரளவு கவலையைத் தரக்கூடியது என்றாலும், இது கவனிக்கப்படாவிட்டால், தேர்வுகள் குறித்து அதிகம் கவலை கொள்வது பதற்றத்துக்கு இட்டுச் செல்லும். அத்துடன் இது மாணவர்களின் கல்வித் திறனை பாதிப்பதுடன் வேறு வகையான பதற்றம், மன அழுத்தம், மனநலப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கு இட்டுச் செல்லும்,” என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ‘ஃபோக்கஸ் ஆன் ஃபேமிலி’ என்ற அறநிறுவனம் கூறுகிறது.
தேர்வுகள் குறித்த இந்த பதற்றத்தை மாணவர்களுக்கு அவர்கள் தரக்கூடிய ஆதரவு எதிர்மறையான பாதிப்புகளை குைறக்க வல்லது என்றும் இந்த ஆய்வு விளக்குகிறது.
எதிர்வரும் பள்ளித் தேர்வுகள் குறித்து கவலைப்படும் ஐந்தில் மூன்று மாணவர்கள் தங்களுக்கு நீடித்த பெற்றோர் ஆதரவு இல்லை என்று கூறுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.
“பள்ளி மாணவர்கள் தங்களது கல்வித் திறன் தொடர்பில் கடும் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் என்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
“அவர்களுக்கு பெற்றோர் அன்றாடத் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்வதுடன் நில்லாமல் அவர்களின் உணர்வுபூர்வமான தேவைகளுக்கும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்,” என்று இந்த அற நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திருவாட்டி ஜோவனா கோ ஹோ கூறுகிறார்.
மேலும், ஆய்வில் பங்கேற்ற 10ல் ஏழு மாணவர்களுக்கும் அதிகமானோர் தாங்கள் தாய், தந்தை இருவருடனும் பாசப் பிணைப்பில் இருப்பதாகக் கூறினர்.
அதிலும், 13லிருந்து 15வயது
உைடய மாணவர்களைவிட 10லிருந்து 12 வயதுக்குட்பட்ட மாணவர்களே தங்கள் பெற்றோருடன் நெருங்கிய பாசப் பிணைப்பில் இருப்பதாக தெரிவித்தனர்.
இந்த ஆய்வு ஆண்டுதோறும் இடம்பெறும் பிள்ளைகள் தின இயக்கத்தின் ஒரு பகுதியாக ஃபோக்கஸ் ஆன் ஃபேமிலி நிறுவனம் மேற்கொண்டுள்ளது.