சிங்கப்பூரில் புதிதாக அறுவருக்கு கொவிட்-19 இருப்பதாக இன்று சனிக்கிழமை நண்பகல் அளவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் சமூகத்தில் இருப்பவர்; நான்கு பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.
இவ்வாண்டு மார்ச் 5ஆம் தேதிக்குப் பிறகு ஒரு நாளில் பதிவான ஆகக் குறைவான தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை இதுதான் . சமூக அளவில் பாதிக்கப்பட்ட அந்த ஒருவர் சிங்கப்பூரர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இதனுடன் சிங்கப்பூரில் கிருமித்தொற்று மொத்த பாதிப்பு 57,800ஆக உயர்ந்துள்ளது. மேல் விவரங்கள் இன்றிரவு வெளியிடப்படும்.
நேற்று வெள்ளிக்கிழமையன்று பத்து புதிய கொவிட் -19 சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன. அவர்களில் ஒருவர் சமூகத்தில் இருப்பவர்; ஐவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். அந்த ஐவரில் ஒருவர் சிங்கப்பூரர், ஒருவர் நிரந்தரவாசி, ஒருவர் ‘சார்ந்திருப்போர் அட்டை’ வைத்திருப்பவர். கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட எஞ்சிய நால்வர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று அமைச்சு கூறியது.