ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை: பெண்ணுக்கு 5 மாத சிறைத் தண்டனை

ஆர்ச்சர்ட் டவர்ஸ் கடைத்தொகுதி கட்டடத்தின் இரண்டாவது மாடியில் இருக்கும் ‘நாட்டி கேர்ள் கிளப்’ என்ற மதுபான விடுதியில் சென்ற ஆண்டு ஜூலை 2ஆம் தேதி சதீஷ் நோயல் கோபிதாஸ், 31, என்பவர் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் டான் சென் யாங், டான் ஹோங் ஷெங், லூ பூன் சோங், சான் ஜியா ஸிங், ஜோயல் டான் யுன் ஷெங், ஆங் டா யுவான், நட்டாலி சியோ யூ ஸென் ஆகியோர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டது.

இவர்களில் ஜோல் டான், ஆங், நட்டால் சியோவ் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டு தாக்குதல் குற்றச்சாட்டாகக் குறைக்கப்பட்டது.

ஆங்கிற்கு எட்டு மாதச் சிறையும் ஆறு பிரம்படியும் விதிக்கப்பட்டது. ஜோயல் டானுக்கு நான்கு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டு இருந்த ஒரே ஒரு பெண்ணான நட்டாலி சியோவுக்கு இன்று ஐந்து மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

டான் சென் யாங், 28, இன்னமும் கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருக்கிறார். லூ, சான், டான் ஹோங் ஷெங் ஆகிய மூவருக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!