பயங்கரவாதம் தொடர்பான செயல்கள் காரணமாக உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட முன்னாள் சிங்கப்பூரர் ஒருவருக்கு பாஸ்போர்ட் குற்றத்துக்காக ஆறு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுல்ஃபிகார் முகம்மது ஷரிஃப், 49, என்ற அந்த ஆடவர், சிங்கப்பூர் குடியுரிமை இருந்தாலும் ஆஸ்திரேலிய குடியுரிமையையும் பெற்று இருந்தார். ஆனால் 2013ல் சிங்கப்பூர் பாஸ்போர்ட் பெறுவதற்கு மனுச் செய்தபோது, வேறு எந்த நாட்டு குடியுரிமையும் தனக்கு இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
சுல்ஃபிகார் முகம்மது ஷரிஃப், பயங்கரவாதத்தையும் ஐஸ்ஐஎஸ் அமைப்பையும் மும்முரமாக ஆதரித்ததற்காக கைதானவர். சிங்கப்பூரில் இரட்டைக் குடியுரிமைக்கு அனுமதி இல்லை. ஆகையால் அவர் சிங்கப்பூர் குடியுரிமையைத் துறந்துவிட்டார்.
பாஸ்போர்ட் சட்டத்தை மீறிய தாகக் கூறும் ஒரு குற்றச்சாட்டின் பேரில் சுல்ஃபிகார் குற்றத்தை இன்று ஒப்புக்கொண்டார்.