கடந்த ஆண்டு சிங்கப்பூரின் வானிலை பலவகைகளில் வியக்கத்தக்கதாக இருந்ததாக தேசிய சுற்றுப்புற வாரியத்தின் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
சிக்கப்பூரின் வானிலை மற்ற நாடுகளைப் போல இல்லாமல் பல முரண்பாடுகளைக் கொண்டிருந்ததாக வாரியம் கூறியது.
சிங்கப்பூரின் வானிலை கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சராசரி வெப்பநிலைக்கும் அதிகமாக சூடாக இருந்தது.
ஆனால் அடுத்த ஆறு மாதங்களில் நிலைமை முற்றிலும் மாறியது.
சராசரி வெப்பநிலைக்கும் குறைவாக குளிராக இருந்தது.
தென்மேற்குப் பருவமழையால் கனமழை பெய்தபோதிலும் சிங்கப்பூரின் எட்டாவது ஆக வெப்பமான ஆண்டாக கடந்த ஆண்டு பதிவாகியது.
கடந்த ஆண்டுக்கான சராசரி வெப்பநிலை 28 டிகிரி செல்சியசாக இருந்தது.
இது நீண்டகால சராசரியைவிட அரை டிகிரி அதிகம்.
2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து தொடர்ந்து 28 மாதங்களுக்கு சராசரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவானது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவுக்கு வந்தது.
சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி சிங்கப்பூரின் வானிலைப் போக்கு மற்ற நாடுகளுடன் வித்தியாசமாக இருந்தது.
உலகளாவிய நிலையில், கடந்த பத்து ஆண்டுகளில், ஆக வெப்பமான மூன்று ஆண்டுகளில், கடந்த ஆண்டும் ஒன்று என்று தெரிவிக்கப்பட்டது.
அதிக வெப்பமுள்ள பத்து ஆண்டுளாக கடந்த பத்து ஆண்டு கள் பதிவாகியது.
சிங்கப்பூரில் பெய்த மழையின் அளவு நீண்டகால வருடாந்திர சராசரியைவிட குறைவாக இருந்தது.
ஆனால் குறிப்பாக கடந்த ஆண்டின் பிற்பகுதியில் அடிக்கடி கனமழை பெய்தது.
பொதுவாக ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை அவ்வளவாக மழை பெய்யாது.ஆனால் கடந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக சிங்கப்பூரிலும் சுற்றியுள்ள நாடுகளிலும் அதிக அளவில் மழை பெய்தது.
இதன் விளைவாக கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் வரை சிங்கப்பூரில் பெய்த மழை 1981ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டு வரை பதிவான நீண்டகால சராசரியைவிட 30 விழுக்காடு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது.
இவ்வாண்டு தொடங்கியதிலிருந்து சிங்கப்பூரின் வெப்பநிலை வழக்கத்துக்கு மாறாக குறைவாக இருக்கிறது.