புதுடெல்லி: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற எரிபொருட்களுக்கு மாற்றாக மின்சாரம் பயன்படுத்துவதை ஊக்குவிக்க ‘கோ எலெக்ட்ரிக்’ என்னும் விழிப்புணர்வுப் பிரசாரத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.
தரைவழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அதனைத் தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், “எல்லா அரசு அதிகாரிகளும் மின்சார வாகனங்களைப் பயன்படுத்த அறிவுறுத்தவும் கட்டாயமாக்கவும் வேண்டும் அதற்கு முன்னோடியாக போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் இதனை அறிவுறுத்துவேன்,” என உறுதியளித்தார். மின்சாரத் துறை அதிகாரிகளும் மின்சார வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும் என மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் கட்கரி கேட்டுக்கொண்டார்.
டெல்லியில் 10,000 வாகனங்களை மின் வாகனங்களாக இயக்கினாலே அதன்மூலம் மாதம் ரூ.30 கோடி சேமிக்கலாம் என்றார் அவர்.