மின்சார கார்களைப் பயன்படுத்த ஊக்குவிப்பு

மின்சார கார்களைப் பயன்படுத்த ஊக்குவிப்பு

1 mins read
b85b071a-c444-4223-a6bb-2d01977be8f4
-

புது­டெல்லி: பெட்­ரோல், டீசல், சமை­யல் எரி­வாயு போன்ற எரி­பொ­ருட்­க­ளுக்கு மாற்­றாக மின்­சா­ரம் பயன்­ப­டுத்­து­வதை ஊக்­கு­விக்க 'கோ எலெக்ட்­ரிக்' என்­னும் விழிப்­பு­ணர்வுப் பிர­சா­ரத்தை மத்­திய அரசு தொடங்கி உள்­ளது.

தரைவழி போக்­கு­வ­ரத்து அமைச்­சர் நிதின் கட்­கரி அத­னைத் தொடங்­கி­வைத்­தார்.

அப்­போது அவர் பேசு­கை­யில், "எல்லா அரசு அதி­கா­ரி­களும் மின்­சார வாக­னங்­க­ளைப் பயன்­ப­டுத்த அறி­வு­றுத்­த­வும் கட்­டா­ய­மாக்­க­வும் வேண்­டும் அதற்கு முன்­னோ­டி­யாக போக்­கு­வ­ரத்­துத் துறை அதி­கா­ரி­க­ளி­டம் இதனை அறி­வு­றுத்­து­வேன்," என உறு­தி­ய­ளித்­தார். மின்­சா­ரத் துறை அதி­கா­ரி­களும் மின்­சார வாக­னங்­க­ளைப் பயன்­ப­டுத்த வேண்­டும் என மின்­துறை அமைச்­சர் ஆர்.கே.சிங்­கி­டம் கட்­கரி கேட்­டுக்­கொண்­டார்.

டெல்­லி­யில் 10,000 வாக­னங்­களை மின்­ வாக­னங்­க­ளாக இயக்­கி­னாலே அதன்­மூ­லம் மாதம் ரூ.30 கோடி சேமிக்­க­லாம் என்றார் அவர்.