சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து டாக்டர் டான் செங் போக் அண்மையில் விலகினார். அக்கட்சியின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.
வர்த்தகங்கள், குலவழிச் சங்கங்கள் உட்பட கூடுதல் சிங்கப்பூரர்களுடன் தொடர்புகொள்வதில் கவனம் செலுத்தப்போவதாக டாக்டர் டான் இன்று தெரிவித்தார்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியில் அடித்தள அமைப்பு முயற்சிகளைப் பலப்படுத்துவதிலும் கட்சிக்காக புதிய உறுப்பினர்களைத் தேடுவதிலும் கவனம் செலுத்த இருப்பதாக அவர் கூறினார்.
“கட்சியின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து விலகியதன் மூலம் நான் ஒய்வுபெறுவதாக ஆகிவிடாது. மாறாக, நான் கட்சியை உருமாற்றுகிறேன்,” என்றார் டாக்டர் டான்.