சிங்கப்பூரில் மேலும் 35 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இத்துடன் இங்கு கொவிட்-19 கிருமியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60,554ஐ எட்டிவிட்டது.
நேற்று அறிவிக்கப்பட்ட புதிய சம்பவங்களில், சமூகப் பாதிப்பு ஒன்றும் அடங்கும். வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் வசிப்போர் யாரும் புதிதாகக் கிருமித்தொற்றால் பாதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் கிருமித்தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட 24 பேரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து திரும்பிய நிரந்தரவாசிகள் ஐவர் இதில் அடங்குவர். 13 பேர் வேலைக்காக சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும் கூறப்பட்டது.