தமது சட்ட நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த $33 மில்லியனைக் கையாடி மலேசியாவுக்குச் சென்ற வழக்கஞருக்குப் பிணை மறுக்கப்பட்டுள்ளது.
43 வயது ஜெஃப்ரி ஓங் சு ஓனின் பிணை மனுவை மாவட்ட நீ்திபதி டெரன்ஸ் டே நேற்று ஏற்க மறுத்தார்.
ஓங் காணொளி மூலம் நீதி
மன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நம்பிக்கை துரோகக்
குற்றம் தொடர்பாக 31 குற்றச்சாட்டு களையும் மோசடி போன்ற குற்றங்கள் தொடர்பாக 45 குற்றச்சாட்டு களையும் ஓங் எதிர்நோக்குகிறார்.
ஓங் கையாடிய தொகையை சிங்கப்பூரில் வழக்கறிஞர் ஒருவரால் கையாடப்பட்ட ஆகப் பெரிய தொகை என அரசாங்க வழக்
கறிஞர்களால் முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மலேசியத் தலைநகர்
கோலாலம்பூரில் உள்ள ஹோட்டலில் ஓங் கைது செய்யப்பட்டதை அடுத்து, 2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் கைது செய்யப்பட்டபோது அவரிடம் திருடப்பட்ட மலேசிய பாஸ்போர்ட் இருந்ததாக மலேசிய போலிசார் தெரிவித்தனர்.
2019ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் தேதியன்று ஓங் சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டார். தொழில் நிமித்தமாக தமது கட்சிக்காரர் கோலாலம்பூருக்குச் செல்ல வேண்டியிருப்பதாக ஓங்கின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனால் ஓங்கின் சார்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் அது குறிப்பிடப்படவில்லை என்று சுட்டிய நீதிபதி பிணை வழங்க மறுத்துவிட்டார்.