அதிக எண்ணிக்கையிலானோர் செல்லும் இடங்களில் 'சேஃப்என்ட்ரி கேட்வே' சாதனங்களின் பயன்பாடு நேற்று முன்தினம் முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடைத்தொகுதிகள், திரையரங்குகள், பேரங்காடிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட 2,700 இடங்களில் இந்தப் புதிய 'சேஃப்என்ட்ரி' அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் தங்களது டிரேஸ்டுகெதர் கருவியை அல்லது செயலியை அந்தச் சாதனங்களில் தட்டி தங்களது வருகையைப் பதிவு செய்துகொள்ளலாம். தொடர்பு
களின் தடமறிய இந்தத் தரவு பயன்படும்.
இதன் மூலம், 'சேஃப்என்ட்ரி' சாதனங்கள் நிறுவப்படும் கிட்டத்தட்ட 200,000 இடங்களில் டிரேஸ்டுகெதர் மட்டுமே பார்வையாளர்கள் பதிவு செய்துகொள்ளக்கூடிய தளமாக அமையும்.
கூட்டம் அதிகமாக இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் 'சேஃப்என்ட்ரி கேட்வே பாக்ஸ்' சாதனம் அல்லது 'சேஃப்என்ட்ரி (வர்த்தகம்)' செயலி மூலம் 19ஆம் தேதி முதல் உள்நுழைவு பதிவு செய்ய வேண்டுமென அறிவார்ந்த தேசம் மற்றும் மின்னிலக்க அரசாங்க அலுவலகம் (SNDGO) கடந்த மாதம் 16ஆம் தேதி அறிவித்தது.
100 பேருக்கு மேல் செல்லக்
கூடிய ஈரச்சந்தைகள், பெரிய சில்லறை விற்பனைக் கடைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட அரும்பொருளகங்கள், கண்காட்சிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், இறுதிச்சடங்கு கூட்டம் நடத்தப்படும் இடங்கள், மைஸ் (கூட்டங்கள், மாநாடு, கண்காட்சிகள்) நடத்தப்படும் இடங்கள் போன்றவற்றில் அந்தப் புதிய நுழைவுப் பதிவு ஏற்பாடு பொருந்தும்.
தற்போது நடப்பில் இருக்கும் சேஃப்என்ட்ரி பதிவு முறைகளில் கியூஆர் குறியீடுகளைப் பயன்
படுத்தியோ அல்லது பார்வையாளர் களின் அடையாள எண்ணைப் பயன்படுத்தியோ பதிவுகள் செய்யப்படுகின்றன.
தற்போதைக்கு நேரடி கலை
நிகழ்ச்சிகள், திரையரங்குகள், தேர்ந்தெடுக்கப்பட்ட இரவுநேர கேளிக்கை விடுதிகள் போன்ற முன்னோட்டங்கள் பார்க்கப்படும் வர்த்தகங்கள் அல்லது நிகழ்ச்சிகள் தவிர மற்ற இடங்களில் 'டிரேஸ்டுகெதர்' மூலம் 'சேஃப்என்ட்ரி' பதிவுகள் தேவைப்படுவதில்லை.
புதிய 'சேஃப்என்ட்ரி' நுழைவுப் பதிவுகள் தொடங்கப்பட்டுள்ள இடங்கள் பலவற்றில் ஏப்ரல் 19க்கு முன்னதாகவே 'சேஃப்என்ட்ரி கேட்வே' பதிவுகள் நடப்பில் இருந்ததாக SNDGO கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் தெரிவித்தது.
நுழைவுப் பதிவுகள் விரைவாகச் செய்ய முடிவதுடன், டிரேஸ்
டுகெதர் வில்லைகள் செயல்படுகின்றனவா என்பதையும் இந்தப் புதிய முறை தெரியப்படுத்தும்.
டிரேஸ்டுகெதர் வில்லைகள் செயல்படாமல் இருந்தால், அவற்றை எந்தவொரு சமூக மன்றத்திலும் இலவசமாக மாற்றிக்கொள்ள முடியும்.
சிங்கப்பூர்வாசிகளில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் டிரேஸ்டுகெதர் திட்டத்திற்கு உட்பட்டுள்ள நிலையில், அதிக அளவிலான வர்த்தகங்களும் 'சேஃப்என்ட்ரி கேட்வே' சாதனத்தைப் பயன்படுத்து மாறு SNDGO ஊக்குவிக்கிறது.
அந்தச் சாதனத்தைப் பயன்படுத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இடங்களின் நடத்துநர்கள் நான்கு சேஃப்என்ட்ரி கேட்வே சாதனங்கள் வரை இலவசமாகப் பெற முடியும்.
அதிக எண்ணிக்கையில் சாதனங்கள் தேவையெனில் அந்த கேட்வே அமைப்பை உருவாக்கிய அரசாங்கத் தொழில்நுட்ப முகவை
யிடம் கேட்டுப்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
'சேஃப்என்ட்ரி (வர்த்தகம்)' செயலியையும் கைபேசிகளில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அந்தச் செயலி, 'சேஃப்என்ட்ரி கேட்வே' தொடர்பிலான கூடுதல் தகவல்களுக்கு 'சேஃப்என்ட்ரி' இணையப்பக்கத்தை நாடலாம்.