ஆர்த்தி சிவராஜன்
தமிழர் பாரம்பரியத்தில் பொம்
மலாட்டம் ஒரு சிறப்பம்சம் கொண்ட கலை ஆகும்.
அத்தகைய பொம்மலாட்டத்திற்கு மின்னிலக்கம் வாயிலாக உயிரூட்டுவதே 'மாத்தி யோசி' என்ற நிகழ்ச்சியின் நோக்கம்.
சிங்கைத் தமிழ்ச் சங்கம், பெக் கியோ இந்திய நற்பணிச் செயற்குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் தமிழ்மொழி விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர் துணை அமைச்சரான திரு ஆல்வின் டான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இம்மாதம் 2ஆம் தேதி மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரை இந்த நிகழ்ச்சி ஃபேஸ்புக் வழியாக ஒளிபரப்பப்பட்டது.
சிங்கைத் தமிழ்ச் சங்கத்தின் கௌரவச் செயலாளரான திரு சஞ்சை முத்துக்குமரன், "நம் தமிழ் இலக்கியங்கள் பொம்மலாட்டம் மூலம்தான் மக்களிடம் கொண்டுசேர்க்கப்பட்டது. உலகத்தில் அனைத்துமே மின்னிலக்கமயமாகும்போது, நமது பாரம்பரிய கலையையும் மின்னிலக்க முறையில் படைத்தால் எப்படி இருக்கும் என்ற சிந்தனை தோன்றியது. ஒரு குறும்படத்தில் நடிகர்கள் இல்லாமல் பொம்மைகள் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து உருவாக்கியதுதான் இந்த மின்னிலக்கப் பொம்மலாட்டம்.
இதற்கு பப்பெட்மாஸ்டர் (PuppetMaster) என்ற ஒரு செயலியை நாங்கள் பயன்படுத்தினோம். நாங்கள் வரைந்து அல்லது தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கிய உருவங்களுக்கு அந்தச் செயலியின் மூலம் அசை
வளித்து, பிறகு அவற்றுக்குக் குரல் கொடுத்து, அப்படைப்பிற்கு இசையுடன் உயிர் அளித்தோம்," என்று கூறினார்.
குழுவிற்கு ஐந்து போட்டியாளர்களாக மொத்தம் 30 போட்டியாளர்கள் ஆறு குழுக்களாக மின்னிலக்கப் பொம்மலாட்டக் குறும்படங்கள் தயாரிக்கும் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சிறந்த மூன்று நிகழ்ச்சியில் படைப்புகள் காண்பிக்கப்பட்டன.
இளையர் பிரிவில் (14-17 வயதினர்) ராஃபிள்ஸ் கல்விக் கழகத்தைச் சேர்ந்த பிரசன்னாராஜ், பிரவீன் குமார், அஷ்வின் குமார், சங்கர் விக்னேஷ் மற்றும் முரளி
கிருஷ்ணன் நிகிலேஷ் உள்ளிட்ட குழு முதல் இடத்தைப் பெற்றது. பெரியோர் பிரிவில் (18-20 வயதினர்) விக்னேஷ் செந்தில்நாதன், நிகில் பாபு, காமராஜ் திருக்குமரன், ரெக்ஸ் ஹூபர்ட் ஃபிளிப், ஸ்ரீகாந்த் அபிநவ் உள்ளிட்ட குழு முதல் பரிசை பெற்றது.