தீப்பிடித்த வீட்டில் ஆடவரைக் காப்பாற்றினார்

புக்­கிட் பாத்­தோக்­கில் நேற்று முன்­தி­னம் காலை நிகழ்ந்த தீவி­பத்­தின் போது ஆட­வர் ஒரு­வர் தமது மனை­வி­யு­டன் ஓடிச்­சென்று உத­வி­னார்.

முகம்­மது நசி­ரு­தீன் முகம்­மது காலித், 32, எனப்­படும் அவர், தமது இரு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது புக்­கிட் பாத்­தோக் ஈஸ்ட் அவென்யூ 3ல் தமது புளோக் 238ன் மாடி­யில் அண்டை வீட்­டி­லி­ருந்து புகையும் கருகிய வாடையும் வரு­வ­தைக் கண்டு அந்த வீட்டை நோக்கி ஓடி­னார்.

வீட்­டி­னுள் ஆட­வர் ஒரு­வர் சுயநினைவின்றி விழுந்து கிடப்­ப­தைக் கண்ட அவர் சற்­றும் தாம­திக்­கா­மல் சன்­னல் கத­வைத் தட்­டி­விட்டு உள்ளே நுழைந்­தார். அவ­ரது மனைவி தீய­ணைப்­புச் சாத­னத்தை தமது வீட்­டி­லி­ருந்து எடுத்து வர ஓடி­னார்.

சம்­ப­வம் குறித்து ‘த நியூ பேப்­பர்’ செய்­தித்­தா­ளி­டம் நசி­ரு­தீன் விவ­ரித்­தார். “ஒரே கரும்­பு­கை­யாக இருந்­தது. அந்த ஆட­வரை எப்­ப­டியோ சமா­ளித்து வெளியே இழுத்து பொதுத் தாழ்­வா­ரத்­திற்­குக் கொண்டு வந்­தேன். தட்டி எழுப்பியதும் அவர் எழுந்துவிட்டார். சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர் வரும் வரை பொது­மக்­கள் தண்­ணீரை ஊற்றி நெருப்பை அணைத்­தார்­கள்,” என்­றார்.

இவ­ரும் வீட்­டி­லி­ருந்து மீட்­கப்­பட்ட 37 வயது ஆட­வ­ரும் சுய­நி­னை­வு­டன் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர். அந்த வீட்­டில் அவர் வாட­கைக்­குத் தங்கி இருந்­த­தா­கத் தெரிய வந்­தது. தீ பற்­றிய விதம் குறித்த விசா­ரணை தொட­ரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!