சாலை விபத்து: ஒருவர் மரணம்

ஆர்ச்சர்ட் ரோடு அருகே கப்பேஜ் பிளாசாவுக்குப் பின்பக்கம் வெள்ளிக்கிழமை இரவில் நிகழ்ந்த சாலை விபத்தில் மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மாண்டார். இதர ஆறு பேர் காயம் அடைந்தனர். அந்த விபத்தைக் காட்டும் காணொளிகளும் படங்களும் இணையத்தில் பதிவேற்றப்பட்டன.

கார், லாரி, இரண்டு மோட்டார்சைக்கிள்கள் ஆகியவை விபத்தில் சிக்கியதாக போலிஸ் அறிக்கை தெரிவித்தது.

காயம் அடைந்தவர்கள் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் 31 வயதுள்ள மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் இறந்துவிட்டதாகவும் தெரிவித்த போலிசார், புலன்விசாரணை நடப்பதாகவும் கூறினர்.

விபத்து காரணமாக போக்குவரத்துத் தேக்கம் ஏற்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

விபத்தில் சிக்கிய ஒரு கார் முற்றிலும் எரிந்தது. லாரியும் இரண்டு மோட்டார்சைக்கிள்களும் குடைசாய்ந்த சாலையில் கிடந்தன. அவற்றில் யாரும் சிக்கி இருக்கவில்லை என்று குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!