இவ்வாரம் வியாழக்கிழமை முதல் இரண்டு, மூன்று, நான்கு ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த பயணிகள், சிங்கப்பூர் வருவதற்கு அதிகபட்சமாக 48 மணிநேரத்திற்கு முன் ‘பிசிஆர்’ பிரசோதனையை மேற்கொண்டு அதில் அவர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்படாதது உறுதியாகவேண்டும். நிபந்தனை இதற்கு முன் 72 மணிநேரமாக இருந்தது. கிருமித்தொற்று ஏற்படும் அபாயத்தின் அளவைப் பொறுத்து நாடுகள் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் உள்ள நாடுகளில் அபாயம் ஆகக் குறைவு.
சில நாடுகள் மற்ற பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. உதாரணமாக மூன்றாம் பிரிவில் இருந்த தென்கொரியா இப்போது இரண்டாம் பிரிவில் உள்ளது. அங்கிருந்து வரும் பயணிகள் ஏழு நாட்களுக்கு அவர்கள் விட்டில் தனிமைப்படுத்தப்படுவர்.