தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் நிறுவனரும், அடித்தளத் தலைவருமான திரு யூசுப் ராவுத்தர் ரஜித்தின் மூன்று நூல்கள் கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியிடப்பட்டன. நிகழ்ச்சி பெக்கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு ஏற்பாட்டிலும், தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழக ஆதரவுடனும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
'பிதா' என்கிற சிங்கப்பூர் சூழ்நிலையில் எழுதப்பட்ட நாவல், 'சுண்டவத்தல்' என்ற சிறுகதைத் தொகுப்பு, 'ஒரு சொல்லால் உயிர் நீவு' என்ற கவிதைத்தொகுப்பும் நிகழ்ச்சியில் வெளியீடு கண்டன.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தின ராக தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக தொழில் துணை அமைச்சருமான திரு எல்வின் டான் கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டார்.
திரு டான், நூலாசிரியரின் சமூகத்தொண்டடையும்
எழுத்துப்பணியை யும் பாராட்டியதுடன், ஆதரவு தேவைப்படுவோருக்கு ஆதரவு வழங்கும் வகையில் நடத்தப்படும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வின் மூலம் திரட்டப்பட்ட நன்கொடை அனைத்தும், வெளிநாட்டு ஊழியர்களின் நலனுக்காக அளிக்கப்படுவதாகவும், நன்கொடைகளை வழங்கி ஆதரவளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நூலாசிரியர் திரு ரஜித் நன்றி தெரிவித்தார்.
இந்த நூல் வெளியீடு மூலமாக வெளிநாட்டு ஊழியர் நலனுக்காக திரட்டப்பட்ட $8,150.30க்கான காசோலையை அமைச்சர் itsRainingRaincoats என்ற அமைப்புக்கு வழங்கினார்.