சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று பல்கிப் பெருகி வருவதால், இக்காலக் கட்டத்தில் வெளியில் செல்வதைக் குறைக்கும்படியும் கூடுதல் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும் மூத்தோர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சரும் கிருமிப்பரவலுக்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு ஓங் யி காங் நேற்றுமுன்தினம் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவ்வாறு கேட்டுக்கொண்டார்.
மூத்தோர் தங்கள் சமூக நட வடிக்கைகளில் மீண்டும் ஈடுபடுவதற்கு கால அட்டவணை உள்ளதா என்ற கேள்விக்கு திரு ஓங் பதில் அளித்தார். சமூக நடவடிக்கை களைத் தொடர்வதற்கு எவ்வளவு வாரங்கள் அல்லது மாதங்கள் எடுக்கும் என்று தெரியாது. ஆனால் இப்போது அதற்கான நேரமல்ல என்றார் அவர்.
இந்த அலையைக் கடக்கும்போது, புதிய சுதந்திரமும் நம்பிக்கையும் கிருமித்தொற்றை எதிர்கொள்வதற்கான கூடுதல் திறனும் பெறுவோம் என்று திரு ஓங் தெரிவித்தார்.