கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க உணவங்காடி நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாமல் விதிமுறைகளை மீறிய 84 பேருக்கு எதிராக தேசிய சுற்றுப்புற வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இரண்டு பேருக்கு அதிகமானோர் ஒன்றுகூடியது, ஒரு மீட்டர் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்காதது, முகக்கவசம் அணியாதது போன்ற விதிமீறல்கள் நிகழ்ந்ததாக வாரியம் கூறியது.
நியூட்டன் உணவங்காடி நிலையம், வாம்போ உணவங்காடி நிலையம், ஹேக் ரோடு உணவங்காடி நிலையம், கோல்டன் மைல் உணவங்காடி நிலையம், ஹோங் லிம் உணவங்காடி நிலையம், சைனா
டவுன் உணவங்காடி நிலையம் ஆகிய இடங்களில் விதிமுறைகளை மீறியவர்களை அதிகாரிகள் கையும்களவுமாகப் பிடித்தனர். கூட்டமான இடங்களைத் தவிர்க்கும்படி மூத்தோருக்கு வாரியம் நினைவூட்டியது.