இணையத்தை மொய்க்கும் மக்கள்

- இந்து இளங்கோவன்

‘பழை­யன கழி­த­லும் புதி­யன புகு­த­லும் வழு­வல கால வகை­யி­னானே’ என்ற நன்னூல் வாக்கு எந்­நா­ளுக்­கும் பொருத்தமானதாக விளங்­குகிறது.

அது­வும், இப்­போ­தைய கொவிட்-19 பர­வல் கால­கட்­டத்­தில் பழைய வழக்­கங்­களுக்­குத் தற்­கா­லி­க­மா­கவோ நிரந்­த­ர­மா­கவோ விடைகொடுத்து, விரும்­பி­னா­லும் விரும்பா­வி­டி­னும் புதிய வழக்­கங்­க­ளுக்கு மாற வேண்­டிய சூழல் ஏற்­பட்­டுள்­ளது. அவ்­வ­கை­யில், தீபா­வ­ளித் திரு­நா­ளும் அதற்கு விதி­வி­லக்­கல்ல.

லிட்­டில் இந்­தி­யா­வில் உள்ள தீபா­வ­ளிச் சந்­தைக்கு குடும்­பத்­து­டன் சென்று கூட்­டத்­தோடு கூட்­ட­மாக புத்­தா­டை­கள் வாங்கி, வீட்­டிற்கு அலங்­கா­ரப் பொருள்­கள் வாங்கி, தீபா­வ­ளிக்­குச் சில நாள்­க­ளுக்­கு­முன் சென்று மரு­தாணி இட்­டுக்­கொண்டு, மத்­தாப்பு வாங்கி, சமைக்க காய்­க­றி­கள், இறைச்சி வாங்கி, தீபா­வளி ஒளி­யூட்டை ரசித்­த­வாறு இரவு உணவு உண்டுவிட்டு வீடு திரும்பி அடுத்த நாள் தீபா­வ­ளிக்குத் தயா­ரா­வது வழக்­க­மாக இருந்­தது.

ஆனால், இந்த ஆண்டு பல குடும்­பங்­களில் இந்த வழக்­கம் மாறி, உண்­ணும் உண­வி­லி­ருந்து உடுத்­தும் உடை வரை அனைத்­தை­யும் வீட்­டி­லி­ருந்­த­வாறே இணை­யத்­தி­லேயே தேர்­வு­செய்து வாங்­கும் போக்கு அதி­க­ரித்­துள்­ளது.

பய­னீட்­டா­ளர்­களில் 74 விழுக்­காட்­டி­னர் இணை­யம் வழி­யா­கப் பொருள் வாங்­கி­யுள்­ள­னர் என்­பது இவ்­வாண்­டிற்­கான ‘விசா’ நிறு­வன ஆய்­வின்­மூ­லம் தெரி­ய­வந்­துள்­ளது. பல­ரும் பொருள் வாங்க இணை­யத்தை நாடு­வ­தால், நேர­டி­யாக கடை­க­ளுக்­குச் சென்று பொருள் வாங்­கு­வோர் எண்­ணிக்கை 52 விழுக்­கா­டா­கக் குறைந்­துள்­ளது.

பொருள்­களை வீட்­டிற்கே நேரில் விநி­யோ­கம் செய்­யும் சேவை­களை 71% சிங்­கப்­பூ­ரர்­கள் பயன்­ப­டுத்­தி­யுள்­ள­னர்.

கொவிட்-19 பர­வ­லால் ஏற்­பட்­டுள்ள ஊழி­யர் பற்­றாக்­குறை, கட்­டு­மா­னத் துறை மட்டு­மின்றி பிற வணி­கங்­க­ளை­யும் வெகு­வா­கப் பாதித்­துள்­ளது. லிட்­டில் இந்­தி­யா­வில் உள்ள சில கடை­கள் ஆட்­பற்­றாக்­கு­றை­யால் சில சேவை­களை நிறுத்­தி­விட்­டன. இப்­பிரச்­சினை­யைச் சமா­ளிக்க இணை­ய­வழி வணி­கம் உத­வு­கிறது என்­றார் ‘ஸ்ரீமு­ரு­கன் டிரே­டிங்’ உரி­மை­யா­ளர் திரு ராம­லிங்­கம்.

ஆயினும், நிலைமை மேம்பட்டதும் அதிகமான வாடிக்கையாளர்கள் நேரில் வந்து பொருள்களை வாங்கிச் செல்வர் என்று கடைக்காரர்கள் பலரும் நம்புகின்றனர்.

“என்­ன­தான் இணை­யத்­தில் ஆடை­களை­யும் காய்­க­றி­க­ளை­யும் அதி­க­மா­னோர் வாங்கி­னா­லும், நேர­டி­யாக வந்து ஆடை­களை அணிந்து பார்த்து, காய்­க­றி­க­ளைக் கைப்­பட தேர்­வு­செய்து வாங்­கு­வ­து­போல் வராது,” என்­றார் ‘ரோஸ் ஃபேஷன்’ கடை­யின் திருமதி ரதி அழ­கிரி, 40.

‘விலை மட்டுமல்ல, அலைச்சலும் குறைகிறது’

தீபா­வ­ளிக்கு 105 வித­மான ஆடை­களை விற்­ப­னைக்கு வைத்­துள்­ளது ‘வினெஷ்யா வின்­டேஜ்’ எனும் இணைய வர்த்­த­கம். தீபா­வளி விற்­பனை தொடங்­கிய 15 நாள்­க­ளி­லேயே 85க்கும் மேற்­பட்ட வாடிக்­கை­யா­ளர்­கள் இதன்­வழி புத்­தா­டை­களை வாங்­கி­யி­ருக்­கின்­ற­னர். அக்­டோ­பர் மாதம் மட்­டுமே இந்த இணைய வர்த்­த­கத்­திற்கு 350 பணிப்­பு­கள் (Orders) வந்­துள்­ளன.

“கடை­க­ளுக்கு நேரில் சென்று ஆயத்த ஆடை­களை வாங்­கி­ய­பின், அவற்­றைத் தையற்­கா­ர­ரி­டம் தந்து வாடிக்­கை­யா­ளர்­கள் தங்­க­ளது உடல் அமைப்­பிற்கு ஏற்ப மாற்­றம் செய்ய வேண்­டி­யுள்­ளது. இந்நிலையில், எங்­களைப் போன்ற பல இணையக் கடை­களில் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் உடல் அள­விற்கு ஏற்ப ஆடை­களை வடி­வ­மைத்­துத் தரு­கி­றோம். இத­னால் விலை மட்­டும் அல்ல, அலைச்­சலும் குறை­கிறது,” என்று கூறினார் ‘வினெஷ்யா வின்­டேஜ்’ உரி­மை­யாளர் குமாரி லாவண்யா.

கடந்த சில ஆண்­டு­க­ளாக அதி­க­மா­னோர் ஃபேஸ்புக், இன்ஸ்­ட­கி­ராம் ஆகிய சமூக ஊட­கங்­கள் வழி­யாக நேர­லை­யில் ஆடை­களை விற்று வரு­கின்­ற­னர்.

அத்­த­கை­யோ­ரில் ஒரு­வர்­தான் ‘அரங்­கன் ஃபேஷன்’ உரி­மை­யா­ளர் திரு­மதி வள்ளி சத்­தி­ய­மூர்த்தி.

நேர­லை­யின்­போது சேலையின் தரம், அது­பற்றிய விவ­ரம் அனைத்­தை­யும் தெரிந்­து­கொள்ள முடி­வ­தால் இணை­யத்­த­ளத்­தை­விட நேரலை மூல­மா­கவே அதி­க­மா­னோர் தம்மிடம் சேலை வாங்கி வருவதாகக் கூறினார் திருமதி வள்ளி.

“மேலும், நேர­லை­யின்­போது விற்­கப்­படும் சேலை­கள் எங்­கி­ருந்து வரு­கின்­றன? எந்த நூலில் நெய்­துள்­ள­னர்? சேலை­யின் கரைப்­ப­குதி எத்­த­கைய வடி­வ­மைப்பைக் கொண்­டுள்­ளது என்­பன போன்ற விவ­ரங்­களைக் கூறிய பிற­கு­தான் சேலை­களை விற்­போம். சேலை­ பற்றிய விவ­ரங்­க­ளைத் தெரிந்து அணி­யும்­போது மகிழ்ச்சியாக உள்ளது என்று வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்,” என்­றார் அவர்.

கடந்த ஆண்டு கொரோனா பர­வத் தொடங்­கி­ய­தும் இணை­யத்­தில் பொருள் வாங்­கும் போக்கு அதி­க­மா­கத் தொடங்­கி­யது. அப்­ப­ழக்­கம் கிரு­மித்­தொற்­றுக் கட்­டுப்­பா­டு­கள் பல­வும் தளர்த்­தப்­பட்ட பின்­ன­ரும் தொடர்­கிறது. இத­னைப் பார்க்­கும்­போது, இணைய வணி­கங்­கள் மீதான நம்­ப­கத்­தன்மை கூடி, அவற்­றின் சேவை­களும் சலு­கை­களும் வாடிக்­கை­யா­ளர்­களை ஈர்த்து வரு­கின்­றன என்­பது தெளி­வா­கிறது.

புதிய அறிவிப்பால் பெரும் பாதிப்பு

சிராங்கூன் சாலை - கேம்பல் லேன் சந்திப்பில் நடையர்கள் சாலையைக் கடக்குமிடம், அக்டோபர் 29 முதல் அக்டோபர் 31 வரை மாலை 6 மணியில் இருந்து இரவு 1 மணிவரையும் நவம்பர் 3 தீபாவளிக்கு முதல்நாள் மாலை 6 மணியில் இருந்து பின்னிரவு வரைக்கும் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதனால் தமது தொழில் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகி வருவதாகக் கூறினார் ஸ்ரீ அம்பாள் பூக்கடை உரிமையாளர் திரு முத்துசின்னக்கலை.

தீபாவளிக்குப் புதுவகை மத்தாப்பு

பல ஆண்டுகளுக்குமுன் தீபாவளி நேரத்தில் இந்திய வீடுகளில் திடீரென ஊதல் சத்தம் பலமாகக் கேட்கும். அதற்கு, அப்போது அறிமுகமான ஊதல் மத்தாப்பே காரணம். அதன்பின், பல புதுவித மத்தாப்புகளும் வெடிகளும் வந்திறங்கின. இந்த ஆண்டு புதிதாக வந்துள்ளது இதய வடி­வி­லான புது­வகை மத்­தாப்­பும், ஐந்து மத்­தாப்­பு­களை ஒரே நேரத்­தில் வெடிக்க உத­வும் ஒரு கரு­வி­யும். பற்­ற­வைக்­கும்­போது ஐந்து மத்­தாப்­பு­களும் குடை­போல் விரிந்து சங்­குச் சக்­க­ரம் போல் சுழ­லும்.

‘புது’மையை விரும்பும் இளமை

‘ஜாகுவா ஜெல்’ என்ற ஒரு­வகை கறுப்பு மையைக் கொண்டு மரு­தா­ணி­யிட்டு வரு­கி­றார் மரு­தா­ணிக் கலை­ஞ­ரான குமாரி ஷரீன் பேகம். இதற்கு இளை­யர்­கள் இடையே நல்ல வர­வேற்பு உள்­ளது. பெண்­கள் வீட்­டில் இருந்­த­வாறே மரு­தாணி இட்­டுக்­கொள்ள ஏது­வாக வரை­யச்­சு­க­ளை­யும் (stencils) இவர் விற்­கி­றார். இப்­போது சிலர், காற்­றுத் தூரிகை உத்­தி­யைப் பயன்­படுத்தி சில நிமி­டங்­களில் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் கைக­ளுக்கு அழ­கு­சேர்த்து விடு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!