ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் சமமான வாய்ப்புகளை வழங்க சிங்கப்பூர் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அப்படியிருந்தும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கிய 'ஸ்டெம்' துறைகளில் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
இத்துறைகளில் பெண்கள் அதிகாரமிக்கவர்களாகச் செயல்பட ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை என்றார் அவர்.
அரசாங்கமும் 'ஸ்டெம்' துறைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய தொடர்ந்து பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இவ்வாண்டு தொடங்கப்பட்ட அதிகாரத் திட்டத்தை இதற்கு உதாரணமாக அவர் சுட்டிக் காட்டினார்.
'ஸ்டெம்' துறைகளில் பெண் தொழில்துறை தலைவர்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்க இந்தத் திட்டம் உதவுகிறது.
ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியின் புதிய உபகாரச் சம்பள முயற்சிகளும் பெண்கள் 'ஸ்டெம்' துறையைத் தேர்ந்தெடுத்து பயில ஆதரவு அளிக்கிறது.
ஆண்களுடன் ஒப்பிடும்போது 'ஸ்டெம்' துறைகளில் தேர்ச்சி பெற்றுள்ள பெண்களில் குறைவானவர்களே அதே துறையில் வாழ்க்கைத் தொழிலை மேற்கொள்கின்றனர் என்று திரு ஹெங் குறிப்பிட் டார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் கடந்த மாதம் மேற்கொண்ட ஆய்வு மூலம் 'ஸ்டெம்' துறையில் பட்டம் அல்லது பட்டயம் பெற்ற பெண்களில் 58 விழுக்காட்டினர் மட்டுமே அத்துறையைத் தேர்ந்தெடுப்பது தெரிய வந்தது.
மேலும் பேசிய பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங் கிணைப்பு அமைச்சருமான ஹெங், வாழ்க்கையை மேம்படுத்தவும் தீர்வு காணவும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் சாத்தியங்கள் குறித்தும் பேசினார்.
கொள்ளைநோய்க்குப் பிந்திய நீடித்த உலகை நோக்கி பொறியியல் துறை என்ற கருப்பொருளில் இவ்வாண்டின் பொறியாளர்கள் மாநாடு நடைெபற்றது.