கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூர் வாசகர்களின் கைகளில் தவழ்ந்த 'த நியூ பேப்பர்' தனது அச்சுப் பிரதியை நேற்று முதல் நிறுத்திவிட்டது. அடுத்த வாரம் முதல் தனது இணையத்
தளத்தில் 'த நியூ பேப்பர்' தொடர்ந்து செய்திகளை வெளியிடும்.
'எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்' நிறுவனம் வாசகர்களின் விருப்பத் திற்கேற்பவும் வேகமாக மாறிவரும் ஊடகச் சூழல் காரணமாகவும் மின்னிலக்க ஊடகத்திற்கு அச்சு ஊடகங்களை உருமாற்றும் வேக மான நடவடிக்கைகளின் ஒரு பகுதி யாக 'த நியூ பேப்பர்' செய்தித் தாளுக்குப் புதிய வடிவம் தரப்படு கிறது. அந்த செய்தித்தாள் நேற்று தனது இறுதி அச்சுப்பிரதியை 'நாளை எப்படி?' என்ற தலைப்பில் வெளியிட்டது. தோ பாயோ எம்ஆர்டி நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் அந்த செய்தித்தாளை வாங்கிச் செல்ல பலரும் ஆர்வம் காட்டினர்.
இதேபோன்ற இரு வரித் தலைப்பு 1993 அக்டோபர் 9ஆம் தேதி இந்த செய்தித்தாள் வெளி யிட்டதை அதன் ஆசிரியர் லிம்ஹான் மிங் நினைவுபடுத்தி உள்ளார். காற்பந்துப் போட்டி ஒன்றை வாசகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்ததைக் குறிக்க 'இன்றிரவு எப்படி?' என்று இரண்டே வரிகளை அதன் முதல் பக்கம் முழுவதும் வெளியிட்டிருந்தது.
"நாளை என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் 'அன்றாட அற்புதம்' என எங்களுக்கு நாங் களே சொல்லிக்கொள்வோம். 33 ஆண்டுகளாக இப்படித்தான் நடந் தது," என்றார் அவர்.
1988 ஜூலை 26ஆம் தேதி த நியூ ேபப்பர் தனது முதல் அச்சுப் பிரதியை வெளியிட்டது. அப்போது முதல் அதன் நீண்டகாலப் பயணத்தில் பல திருப்பங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் அந்த செய்தித்தாள் சந்தித்து வந்திருப்பதாக எஸ்பிஎச் மீடியாவின் ஆங்கில, மலாய், தமிழ் ஊடகக் குழுமத்தின் தலைமை ஆசிரியரும் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' ஆசிரியருமான திரு வாரன் ஃபெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார். அந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக தற்போது மின்னிலக்கப் பாதையில் இது அடியெடுத்து வைப்ப தாகக் கூறிய அவர், இந்தப் பயணம் தொடரும் என்றும் காலத்திற்கு ஏற்ற, புதிய அணுகுமுறைகளை இது கடைப்பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மின்னிலக்க உலகில் வாசகர்களின் எதிர்பார்ப்பு களைப் பூர்த்தி செய்யும் வகையில் இதன் மின்னிலக்கப் பயணம் அமை யும் என ஸ்பிஎச் மீடியாவின் ஆங் கில, மலாய், தமிழ் ஊடகக் குழும மின்னிலக்கப் பிரிவுத் தலைவர் யூஜின் லியோ கூறியுள்ளார்.