சிங்கப்பூரில் 5 வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்ட சிறாருக்குத் தடுப்பூசி போடும் திட்டம் இம்மாதம் நடைமுறைப்படுத்தப்
படுகிறது. இதனை முன்னிட்டு சிறார் தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
புதிதாக அமைக்கப்பட்ட சிறார் தடுப்பூசி நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று முன்தினம் பதிவிட்டார்.
அந்தத் தடுப்பூசி நிலையம் சிறாருக்கு மிகவும் பிடித்தமான 'சூப்பர் ஹீரோ'க்களைக் கொண்ட ஒட்டுவில்லைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒருநாளில் 1,000 சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடும் வசதியைப் புதிய நிலையம் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
மின்மெட் குழுமத்தின்கீழ் இந்த நிலையம் இயங்குகிறது. இம்மாதத்தின் பிற்பகுதியில் சிறாருக்குத் தடுப்பூசி போடும் பணியைத் தொடங்க புதிய நிலையம் தயாராகி வருகிறது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் சிறுவர்களுடன் அவர்
களது பெற்றோரும் கூடவரலாம். என்றார் அமைச்சர் ஓங். புதிய நிலையங்களில் நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடுவதில் சிறப்புப் பயிற்சி மேற்கொண்டவர்கள்.
ஒவ்வொரு சிறார் தடுப்பூசி நிலையத்துக்கும் சிறார் மருத்துவ நிபுணர்கள் ஆதரவளிப்பர்.