கொவிட்-19 தொற்றிலிருந்து அனைத்து வயதினரையும் பாதுகாக்கும் நோக்கத்தோடு மற்ற வயதினருக்கும் தடுப்பூசி படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி டிசம்பர் 27ஆம் தேதி தொடங்கியது.
அப்போதுமுதல் 20,000 சிறுவர் களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.
தொடக்கநிலை 4 முதல் ஆறு வரை பயிலும் பத்து மாணவர்களில் ஆறு பேருக்கு மேல் தடுப்பூசிக்கு பதிந்து கொண்டதாகவும் அவர் சொன்னார்.
கல்வி அமைச்சின் பள்ளிகளில் படிக்காத ஒன்பது முதல் 11 வயது வரையிலான 8,600 சிறுவர்களும் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்துள்ளனர் என்று மேலும் அவர் தெரிவித்து உள்ளார்.
"பெற்றோர் ஆதரவினால் இது சாத்தியமானது. பொதுமக்கள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு அதிகாரிகளின் கடின உழைப்பும் இதற்கு காரணம்," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
"தொடக்கப்பள்ளி மாணவர் களின் தடுப்பூசி விகிதம் நல்ல எண்ணிக்கையில் இருந்தால் நிச்சயமாக 2022ஆம் ஆண்டு வழக்கமான கல்வி ஆண்டாக இருக்கும்.
"வரும் மாதங்களில் பள்ளிகளில் வழக்கமான நடவடிக்கைகளைப் பாதுகாப்பாகத் தொடங்குவது குறித்தும் பரிசீலிக்கலாம்," என்றார் அவர்.
"இன்று மேலும் ஏழு தடுப்பூசி நிலையங்கள் திறக்கப்படும்," என்று தமது ஃேபஸ்புக் பதிவில் அமைச்சர் சான் தெரிவித் திருந்தார். ஏற்கெனவே ஏழு தடுப்பூசி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஐந்து வயது முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்குத் தடுப்பூசி போட ஃபைசர்-பயோஎன்டெக் கமிர்னட்டி தடுப்பூசிக்கு மட்டுமே தற்போது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்குப் போடப்படும் தடுப்பூசி மருந்தில் மூன்று ஒரு பங்கு சிறுவர்களுக்குப் போடப் படுகிறது.
பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து கேள்விகள் இருந்தால் கல்வி அமைச்சு ஜனவரி 5ஆம் தேதி நடத்தும் கருத்தரங்கில் பங்கேற்கலாம் என்று திரு சான் கூறினார்.
சுகாதார அமைச்சு, பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் ஆதரவுடன் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரையில் https://go.gov.sg/5janvaccinewebinar என்ற இணையப்பக்கம் வழியாக கருத்தரங்கு நடைபெறும்.
முதலில் வரும் 3,000 பேருக்கு மட்டும் இதில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும். இதற்கான மறைச்சொல் "5janvac"
இதில் கலந்துகொண்டு பெற்றோர் தங்கள் சந்தேகங்களைப் போக்கிக்கொள்ளலாம் என்று அமைச்சர் சொன்னார்.