கொவிட்-19 தொற்றுச்சம்பவங்கள் அதிகரித்தபோது படுக்கை பற்றாக்குறையால் திணறிய சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கைகொடுத்த ஊட்ரம் சமூக மருத்துவமனை நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகாலமாக அது செயல்பட்டு வருகிறது.
சிங்கப்பூர் ெபாது மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டடங்களை இருபது ஆண்டுகளில் நான்கு பில்லியன் வெள்ளி செலவில் புதுப்பிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஊட்ரம் சமூக மருத்துவ மனை புதிய தோற்றத்தைப் பெற்று உள்ளது.
புதிய சிங்ஹெல்த் டவரில் ஆறு மாடிகளில் அது அைமந்துள்ளது.
"ஒவ்வொரு கட்டடத்தின் உள்கட்டமைப்பு வசதிகளிலும் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. பரமரிப்புச் சேவையை உருமாற்றியமைப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு," என்று சிங்ஹெல்த் தலைமை நிர்வாகி இவி இங் நேற்று திறப்பு விழாவில் தெரிவித்தார்.
புதுப்பிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இவ்வாண்டு பிற்பகுதியில் புதிய தேசிய புற்றுநோய் சிகிச்சை நிலையம் திறக்கப்பட விருக்கிறது. சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் புதிய அவசர சிகிச்சை கட்டடமும் 2024ஆம் ஆண்டிலிருந்து செயல்படவிருக்கிறது.
அடுத்தடுத்து சுகாதாரப் பராமரிப்பு நிலையமும் தேசிய பல் சிகிச்சை நிலையமும் 2027ஆம் ஆண்டுவாக்கில் திறக்கப்படவிருக்கின்றன. இரண்டாவது புதுப்பிப்புப் பணியில் மேம்பட்ட சாலைகளும் அமைக்கப்படும்.
திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய சுகாதார அமைச்சர் ஓங் யீ காங், பொதுக் கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தும் அரசாங்க முதலீடுகளின் ஒரு பகுதியாக இத்தகைய மேம்பாடுகள் இடம்பெறு வதாகத் தெரிவித்தார்.
"முதலீடுகளுக்கு அப்பால் ஒட்டு மொத்த திட்டத்தையும் நுணுக்கமாகச் சிந்தித்து செயல்படுத்த வேண்டியிருக்கிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
உதாரணமாக, சிங்கப்பூரின் தற்போதைய பரப்பரப்பான மிகப்பழமையான மருத்துவமனைச் சேவை களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் சேவைகளையும் சாலைகளையும் மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது என்று அவர் சொன்னார்.
புதிய சமூக மருத்துவமனையில் 545 படுக்கைகள் உள்ளன. பொது மருத்துவமனை வழங்கும் உடனடி சிகிச்சை தேவைப்படாத அதே சமயத்தில் வீட்டுக்குத் திரும்ப முடியாத நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும். முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை, இடுப்பு எலும்பு முறிவு, பக்கவாதம் போன்ற சிகிச்சைகள் அவற்றில் அடங்கும்.
கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்த நோயாளிகள் ஏற்கெனவே உள்ள நோயால் பாதிக்கப்பட்டு பலவீனமடைந்த மறுவாழ்வு தேவைப்படும் முதியவர்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படு கிறது.