பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி இருந்தும் இன்னமும் 31,500 பேர் அதற்குப் பதிந்துகொள்ளவில்லை என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
திங்கட்கிழமை வரையிலான இந்த நிலவரத்தை வெளியிட்ட அமைச்சு, இம்மாதம் 14ஆம் தேதியிலிருந்து அவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக எடுத்துக்கொள்ளப்படாது என்று தெரிவித்தது. அவர்களுடைய தடுப்பூசித் தகுதி 'கூடுதல் தடுப்பூசி தேவைப்படுகிறது' என்ற நிலைக்கு மாற்றப்படும். இவர்கள் அனைவரும் தேசிய தடுப்பூசி இயக்கத்தின்கீழ் ஃபைசர்-பயோஎன்டெக்/கமிர்நாட்டி அல்லது மொடர்னா தடுப்பூசி போட்டு 270 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது என்று அமைச்சு தெரிவித்தது.
தடுப்பூசித் தகுதி மாற்றம், மூன்று முறை சினோவேக்-கொரோனாவேக் அல்லது சினோஃபார்ம் தடுப்பூசி போட்டவர்களுக்கும் அல்லது அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார நிறுவனம் அனு மதித்த தடுப்பூசிகளுக்குப் பொருந்தும். ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை ஒரு முறை போட்டவர்கள், ஆஸ்ட்ரஸெனகா, கொவிஷீல்ட், கோவேக்ஸின் அல்லது நோவாவேக்ஸ் தடுப்பூசி போட்டவர்களும் இதில் அடங்குவர் என்று அமைச்சு குறிப்பிட்டது.
முன்பதிவு செய்யாத இவர் களுக்குத் தொடர்ந்து நினைவூட்டு குறுந்தகவல் அனுப்பி வைக்கப் படுகிறது. "இவர்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசிக்கு பதிந்துகொள்ள வலியுறுத்துகிறோம். தடுப்பூசி நிலையங்களுக்கு நேரடியாக வந்தும் தடுப்பூசி ேபாடலாம்," என்று அமைச்சு மேலும் கூறியது.
ஆஸ்டியோபரோசிஸ் (Osteoporosis) எனும் எலும்பு பலவீனமடைதல் அல்லது எளிதில் எலும்பு உடையும் பிரச்சினைகளில் முதியோர்களுக்கு உதவும் முன்னோடித் திட்டத்துக்கு பேருதவி கிடைத்துள்ளது.
அதிபர் அறப்பணி சவால் மூலம் கடந்த ஆண்டு திரட்டப்பட்ட நிதியிலிருந்து ஒரு பகுதி, அதாவது 250,000 வெள்ளி அத்திட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
'வலுவான எலும்புகள்' எனும் முன்னோடித் திட்டத்தை கடந்த ஆண்டு 'சாட்டா காம்ஹெல்த்' என்ற தொண்டு நிறுவனம் அறி முகப்படுத்தியது.
'ஆஸ்டியோபரோசிஸ்' பிரச்சினைகளால் பாதிக்கப்படும் முதியோருக்கு ஒருங்கிணைக்கப்பட்ட சிசிச்சைகளை வழங்குவது அதன் நோக்கமாகும்.
2011ஆம் ஆண்டிலிருந்து முதியோர்களிடம் 'ஆஸ்டியோபோரசிஸ்' பிரச்சினைகளை பரிசோதனைகள் மூலம் 'சாட்டா காம்ஹெல்த்' கண் டறிந்து வருகிறது. ஆனால் அதன் பிறகு முதியோர்களுக்கு அந்நிறு வனத்தால் தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியவில்லை.
எலும்பு அடர்த்தியைக் கண்டுபிடிக்கும் பரிசோதனைகளை அது நோயாளிகளிடம் நடத்தினாலும் உடற்பயிற்சி சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ சேவைகளுக்கு மற்ற இடங்களை முதியோர் நாட வேண்டியிருந்தது.
தற்போது வழங்கப்பட்டுள்ள நிதி யால் கடந்த நவம்பர் மாதத்தில்இருந்து கண்டறியப்பட்ட ஆஸ்டியோபரோசிஸ் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்க முடியும்.
'சாட்டா காம்ஹெல்த்' சமூகத் திட்டங்களுக்கான தலைவரும் இயக்குநருமான ஷெர்மன் சான், அதிபர் சவால் நிதியால் இத்திட்டத்துக்கென சிறப்புப் பயிற்சி பெற்ற ஒருவரை முழுநேர பணியில் அமர்த்த முடியும் என்றார்.
"புதிய திட்டத்தைத் தொடங்கு வதற்கான செலவுகளை சமாளிக்க முடியும். மூப்படையும் மக்கள்தொகை அதிகரித்து வரும் வேளையில் அவர்களைப் பாதிக்கும் முக்கியப் பிரச்சினைகளில் உதவ முடியும்," என்றும் அவர் தெரிவித்தார்.
மூப்படைதல் விவகாரங்களுக்கான அமைச்சர்நிலைக் குழு, 2030ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் உள்ள நால்வரில் ஒருவர் 65 வயதுக்கு மேல் இருப்பார் என்று கூறிஉள்ளது.
அது மட்டுமல்லாமல், கீழே விழுதலும் அதனால் ஏற்படும் காயமும் முதியோருக்கு முக்கிய பிரச்சினையாக இருக்கும் என்றும் காயம் தொடர்பான முதியோர் இறப்புகளில் நாற்பது விழுக்காடு தவறி விழுந்ததால் இருக்கும் என்றும் அது தெரிவித்தது. சாட்டா காம்ஹெல்த் திட்டத்தால் பலனடைந்தவர்களில் 80 வயது திருமதி ஹாஜ்ஜா சல்மா மாவோனும் ஒருவர். அண்மையில் கீழே விழுந்து காயமடைந்த அவருக்கு திட்டத்தின் மூலம் உடற்பயிற்சி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
"இப்போது என்னால் ஓரளவு நடக்க முடிகிறது. என்னால் தனியாகச் செயல்படவும் முடிகிறது," என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை எண் 351 சாய் சீ ஸ்திரீட்டில் அமைந்துள்ள சாட்டா காம்ஹெல்த் தலைமையகத்துக்கு அதிபர் ஹலிமா யாக்கோப் வருகையளித்தார்.
சமூகத் திட்டங்களை அறிந்துகொள்ளும் நோக்கத்தில் அமைந்த பயணத்தின்போது, சாட்டா காம்ஹெல்த் நிறுவனத்துக்கும் அதன் முன்கள ஊழியர்களுக்கும் அதிபர் ஹலிமா நன்றி தெரிவித்தார்.