உள்துறைக் குழு பயிற்சிக் கழகம், தனது பயிற்சியாளர்களுக்கு மெய்நிகர் காட்சி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடினமான திறன்களில் பயிற்சி அளித்து வருகிறது.
இதன் மூலம் சிங்கப்பூரை பாதுகாப்பாக வைத்திருக்கும் முயற்சியில் அடுத்த தலைமுறை அதிகாரி களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்க வழி ஏற்பட்டுள்ளது.
வகுப்பறை நிர்வாகம், வகுப் பறைகளில் இடையூறுகளை ஏற் படுத்தும் நடத்தைகளை கையாளுதல், திட்ட விளக்கவுரைகள் போன்ற சாதாரண திறன்களில் மெய்நிகர் காட்சி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இதற்கு முன்பு, ஆயுதங்களையும் கலவரங்களையும் கையாளும் கடினமான திறன்களில் மட்டும் பயிற்சியளிக்க மெய்நிகர் காட்சி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
தற்போது. முதல் முறையாக சில சாதாரண திறன்களையும் மேம்படுத்த அந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்று உள்துறைக் குழு பயிற்சிக் கழகத்தின் தலைமை நிர்வாகி அன்வர் அப்துல்லா நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம், சிங்கப்பூர் சிறைத் துறை, மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய உள்துறை அமைச்சின் அனைத்து அமைப்புகளின் பயிற்சி யாளர்களின் திறன்களை உள் துறைக்குழு பயிற்சிக் கழகம் மேம் படுத்தி வருகிறது.
மிதமான திறன்களில் பயிற்சி அளிக்கப்படுவதால் பயிற்சியாளர்கள் தங்களுடைய அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் திறம்பட பயிற்சி அளிக்க முடியும்.
கடந்த அக்டோபர் முதல் இவ்வாண்டு மார்ச் வரையில் 113 பயிற்சி யாளர்களுக்கு 20 மெய்நிகர் காட்சி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.
பலதரப்பட்ட சூழ்நிலைகளை மெய்நிகர் வழியாக உருவாக்கி அத்தகைய சூழலில் முடிவு எடுப் பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
உதாரணமாக, வகுப்பறையில் கற்றுக்கொள்ளும் ஒருவர், கற்பிக்கப்படும்போது இடையூறுகளை ஏற்படுத்துகிறார்.
அந்த சமயத்தில் சூழ்நிலைக்கு ஏற்ற முடிவை பயிற்சியாளர் எடுக்க வேண்டும். இந்த முடிவு பின்னர் பரிசீலிக்கப்பட்டு அது குறித்து கலந்துரையாடி, கருத்தறியப்படுகிறது.