டெப்போ லேனில் அமைந்துள்ள ஆலை ஒன்றில் நேற்று காலை தீ மூண்டது. காப்பிக் கொட்டைகளை வறுக்க ஆலையின் ஊழியர்கள் பெரிய இயந்திரம் ஒன்றைப் பயன்
படுத்திக்கொண்டிருந்தபோது அது தீப்பிடித்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து காலை 10.15 மணி அளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்தை அடைவதற்கு முன்
பாகவே புளோக் 4007ல் இருக்கும் அனைத்து ஆலைகளின் ஊழியர்களும் அங்கிருந்து பத்திரமாக வெளியேறிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சின் ஹப் காப்பி நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு மாடி ஆலையில் தீச்சம்பவம் நிகழ்ந்தது. தீச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.