15,000 பேருக்கு உணவு தயாரிக்கும் 'வில்லிங் ஹார்ட்ஸ்' சமையலறை

15,000 பேருக்கு உணவு தயாரிக்கும் 'வில்லிங் ஹார்ட்ஸ்' சமையலறை

2 mins read
1d06a2f0-a97a-4d6d-bacb-d506d440bcc0
ஜூ சியாட் வட்டாரத்தில் புதிதாகத் திறக்கப்பட்டிருக்கும் 'வில்லிங் ஹார்ட்ஸ்' அறநிறுவனத்தின் சமையலறைக்கு வருகை தந்து அங்கு உணவு தயாரிக்கப்படுவதை நேரில் பார்த்தார் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் (நடுவில்). 'வில்லிங் ஹார்ட்ஸ்' அறநிறுவனத்தின் நிறுவனர் திரு டோனி டே (வலமிருந்து இரண்டாவது) புதிய இடத்தை அமைச்சருக்குச் சுற்றிக் காட்டினார்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை 2020ஆம் ஆண்­டில் தொடங்கி ஒரு­சில மாதங்­களில் கூடு­தல் உணவு விநி­யோ­கம் தேவைப்­ப­டு­வ­தாக உணவு அற­நி­று­வ­ன­மான 'வில்­லிங் ஹார்ட்ஸ்' அமைப்­பி­டம் பலர்

கேட்­டுக்­கொண்­ட­னர்.

அத­னால் சாய் சீயில் உள்ள அதன் சமை­ய­ல­றை­யில் உணவு தயா­ரிப்­பில் வில்­லிங் ஹார்ட்­சின் தொண்­டூ­ழி­யர்­கள் தீவி­ர­மாக ஈடு­பட்டு கூடு­தல் உணவு தயா­ரித்­

த­னர்.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லைக்கு முன்பு நாளுக்கு 7,000 உண­வுப் பொட்­ட­லங்­கள் தயா­ரித்­த­தா­க­வும் நெருக்­க­டி­நி­லை­யின்­போது அது 11,000ஆக உயர்ந்­த­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

தற்­போது ஜூன் சியாட் வட்­டா­ரத்­தில் புதிய சூப் சமை­ய­ல­றையை அந்த அற­நி­று­வ­னம் திறந்­துள்­ளது.

அத­னால் நாளுக்கு 15,000

உண­வுப் பொட்­ட­வங்­களை 'வில்­லிங் ஹார்ட்ஸ்' நிறு­வ­னத்­தால்

தயா­ரிக்க முடி­யும்.

புதிய சமை­ய­ல­றை­யின் பரப்­

ப­ளவு மூன்று வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக நான்­கறை வீடு­க­ளுக்கு நிக­ரா­னது.

சாய் சீயில் இருந்த பழைய சமை­ய­ல­றை­யை­விட ஜூ சியாட் வட்­டா­ரத்­தில் இருப்­பது மூன்று மடங்கு பெரிது.

கூடு­தல் உண­வுப் பொட்­ட­லங்­

க­ளைத் தயா­ரிக்க உத­வும் வகை­யில் புதிய சமை­ய­ல­றை­யில் ஆலை­களில் பயன்­ப­டுத்­தப்­படும் அடுப்பு வகை­கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன.

வரும் ஆகஸ்ட் மாதத்­தி­லி­ருந்து வீடு இல்­லா­மல் தவிப்­போ­ருக்கு புதிய இடத்­தில் அடைக்­க­லம் வழங்க 'வில்­லிங் ஹார்ட்ஸ்'

தயா­ராக இருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

கூடு­தல் தொண்­டூ­ழி­யர்­க­ளைச் சேர்த்­துக்­கொள்­ள­வும் தனது சேவை­களை விரி­வாக்­க­வும் அற­நி­று­வ­னம் விரும்­பு­வ­தாக அதன் நிறு­வ­னர் திரு டோனி டே தெரி­வித்­தார்.

இந்த அற­நி­று­வ­னத்தை அவர் 2003ஆம் ஆண்­டில் தொடங்­கி­னார்.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யின்­போது உணவு கேட்டு தனி­யாக வசிக்­கும் முதி­ய­வர்­கள், வேலை இழந்­தோ­ர் எனப் பலர் தங்களை அணுகியதாக திரு டே கூறி­னார்.