கொவிட்-19 நெருக்கடிநிலை 2020ஆம் ஆண்டில் தொடங்கி ஒருசில மாதங்களில் கூடுதல் உணவு விநியோகம் தேவைப்படுவதாக உணவு அறநிறுவனமான 'வில்லிங் ஹார்ட்ஸ்' அமைப்பிடம் பலர்
கேட்டுக்கொண்டனர்.
அதனால் சாய் சீயில் உள்ள அதன் சமையலறையில் உணவு தயாரிப்பில் வில்லிங் ஹார்ட்சின் தொண்டூழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு கூடுதல் உணவு தயாரித்
தனர்.
கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு நாளுக்கு 7,000 உணவுப் பொட்டலங்கள் தயாரித்ததாகவும் நெருக்கடிநிலையின்போது அது 11,000ஆக உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது ஜூன் சியாட் வட்டாரத்தில் புதிய சூப் சமையலறையை அந்த அறநிறுவனம் திறந்துள்ளது.
அதனால் நாளுக்கு 15,000
உணவுப் பொட்டவங்களை 'வில்லிங் ஹார்ட்ஸ்' நிறுவனத்தால்
தயாரிக்க முடியும்.
புதிய சமையலறையின் பரப்
பளவு மூன்று வீடமைப்பு வளர்ச்சிக் கழக நான்கறை வீடுகளுக்கு நிகரானது.
சாய் சீயில் இருந்த பழைய சமையலறையைவிட ஜூ சியாட் வட்டாரத்தில் இருப்பது மூன்று மடங்கு பெரிது.
கூடுதல் உணவுப் பொட்டலங்
களைத் தயாரிக்க உதவும் வகையில் புதிய சமையலறையில் ஆலைகளில் பயன்படுத்தப்படும் அடுப்பு வகைகள் பொருத்தப்பட்டுள்ளன.
வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து வீடு இல்லாமல் தவிப்போருக்கு புதிய இடத்தில் அடைக்கலம் வழங்க 'வில்லிங் ஹார்ட்ஸ்'
தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
கூடுதல் தொண்டூழியர்களைச் சேர்த்துக்கொள்ளவும் தனது சேவைகளை விரிவாக்கவும் அறநிறுவனம் விரும்புவதாக அதன் நிறுவனர் திரு டோனி டே தெரிவித்தார்.
இந்த அறநிறுவனத்தை அவர் 2003ஆம் ஆண்டில் தொடங்கினார்.
கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது உணவு கேட்டு தனியாக வசிக்கும் முதியவர்கள், வேலை இழந்தோர் எனப் பலர் தங்களை அணுகியதாக திரு டே கூறினார்.