உள்துறைக் குழு அதிகாரிகள் 7,206 பேர், நேற்று நடைபெற்ற பதவி உயர்வு விழாவில் அங்கீகரிக்கப்பட்டனர்.
விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம், தொழில்நுட்பத்தில் உள்துறைக் குழு தொடர்ந்து அதிகப்படியாக முதலீடு செய்துவருவதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன் புதிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் செயல்பாடுகள் தொடர்ந்து மாற்றம் கண்டு வருவதையும் அதிகாரிகள் பார்ப்பர் என்று கூறினார்.
பொதுமக்களின் நம்பிக்கையை உள்துறைக் குழு தக்கவைத்துக் கொள்வதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
"விரும்பத்தகாத ஒரு முடிவாக இருந்தாலும் பலருக்கும் நன்மை தரக்கூடிய கடினமான முடிவுகளை எடுக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
"அப்போதுதான் பொதுமக்களின் நம்பிக்கையை நீங்கள் தக்கவைத்துக்கொள்ள முடியும்," என்றார் திரு சண்முகம்.
பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளுக்கு வாழ்த்து கூறிய அவர், அதிகாரிகளின் பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்தார்.