தன்னுடைய பணப்பையும் அதிலிருந்த $460 ரொக்கமும் திருப்பிக் கிடைத்தது குறித்து ஆங்கிலேயர் ஒருவர் டிக்டாக் சமூகத் தளத்தில் பகிர்ந்துகொண்டார்.
பத்து நாள்களுக்கு முன் கிரிஸ் ஆண்டர்சன் தன்னுடைய பணப்பையைத் தொலைத்தார். அதைக் கண்டெடுத்த அடையாளம் தெரியாத நபர் சிங்கப்பூர்க் காவல் துறையிடம் அதை ஒப்படைத்தார். அதிகாரிகள் பணப்பையை கிரிஸிடம் ஒப்படைத்தனர்.
பணப்பைத் திருப்பி தனக்குக் கிடைத்ததை நம்பமுடியாத கிரிஸ் அதிலிருந்த $460 ரொக்கமும் பொருள்களும் எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.
சிங்கப்பூரர்களின் நேர்மையை எண்ணி அவர் வியப்படைந்தார். இதுவே மற்ற நாட்டில் நடந்திருந்தால், பணப்பைத் திருப்பி கிடைக்க வாய்ப்பில்லை என அவர் கூறினார்.
பணப்பையைக் கண்டுபிடித்து ஒப்படைத்தவருக்கு நன்றி தெரிவித்த கிரிஸ், அவருக்கு காபி அல்லது பீர் வாங்கிகொடுக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.